Tag Archives: கல்லும் கடவுளும்

60, ஒரு சொல் போகும் நேரம்..

எனக்கென்று பிறந்த ஒன்று இன்று எனைவிட்டுப் போகப்போகிறது; நான் சிரிக்கையில் சிரித்து அழுகையில் அழுத ஒன்று போகப்போகிறது; நடக்கையில் நடக்கவும் உறங்கையில் உறங்கவும் சுடுவதைக் கூட சகிக்கவும் முடிந்த ஒன்று போகப்போகிறது வளரும்போதே உடன் வளர்ந்து எனை வளர்த்த தாயைப் போன்றது’ இன்றுப் போகப்போகிறது அசிங்கம் பேசினாலும் சரி அவதூறு பேசினாலும் சரி செய்வது எதுவாயினும் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)

எனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்! மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்! நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

உடம்பு சுடும் சூரியனை விழுங்கி மிதிக்கும் வரப்பெல்லாம் வியர்வையால நனைச்ச மண்ணு உழவர் உயிரைப்பறிக்கும் பச்சமண்ணு; புலரும் காலைப் பொழுதை எமக்கு ஒப்பாரியா கொடுத்த மண்ணு படி அரிசி நெல்லு தேடி தெருவெல்லாம் எமை விதைச்ச மண்ணு; பாவிமக பொறந்த நேரம் பச்சவயல் காயுந் தூரம் வாழ்க்கையது விடியலை சாமி, ஒரு மரணம் கேட்டும் கிடைக்கலை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போதைச் சேற்றில் மனித நாற்றுகள்..

தெரு தெருக்குச் சாராயம் வழிநெடுக்கப் போராடும் வறுமைக்குக் குழிதோண்டும் வாழ்க்கைக்கு பாதாளம்! இளமைக்கு இடராகும் இயற்கைக்கு எதிராகும் இன்பத்தின் எல்லையிலும் போதை; துன்பத்தின் துளிராகும்! கல்விக்கும் கால் சறுக்கும் கடலில் உப்பாய்ச் செல்வங் கரையும் சந்ததிக்கும் குடிகாரப் பழிசூட்டும்; சாகும்போது(ங்)கூட ச்சீ இவனான்னு பிறர்வாயில் பிறப்பு நாறும்! ஒருநாள்னு குடிப்பவனும் ஓலைக் குடிசையில் அடிப்பவனும் மாடிவீட்டில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

செவிலித் தாயிக்கு மனசு வானம் போல..

பிணம்தின்னும் சாமியிடம் வரம் கேட்கும் பூதங்கள், மலமள்ளி மூத்திரம் துடைத்தும் மனதால் மணக்கும் சாமிகள்; அறுந்தக் கழுத்தில் ரத்தம் கசிய கண்ணீரால் கழுவும் தெரசாக்கள், தாயைப் போல கருணைப் பொங்க ஆலயம் தொழும் தெய்வங்கள்; நீதி தேடி ஒதுங்கிடாது சேவை- யாற்றும் தேவதைகள், பாவமூட்டையை தான்சுமந்து வியாதியை போக்கும் சகோதரிகள்; காலவிளக்கை ஊதிவிட்டு; கருணையில் தலைகோதும் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக