Tag Archives: கவிதைகள்

லண்டன் தமிழ் வானொலி கண்ட நேர்காணல் (இறுதி வாரம்)

வாழ்வின் தூரங்களில் சொட்டிய வியர்வைக்கு; என் உறவுகள் தந்த அன்பின் அங்கீகாரம்.. முதல் வாரம் முதல் வாரத்தின் தொடர்ச்சி லண்டன் தமிழ் வானொலியின் தொடுப்பு http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12 http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-37-kavinjar-vidyasagar-25-10-12 அனைவருக்குமான நன்றிகளுடன்.. வித்யாசாகர்

Posted in நேர்காணல் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

43, விடுமுறை நாட்களின் தனிமையும் அவளில்லாத வீடும்..

“என்னங்க சாப்பிட்டீங்களா?” “ம்ம் சாப்பிட்டேம்மா” “நேரத்துக்குத் தூங்குறீங்களா?” “தூங்குறனே?” “மாத்திரையெல்லாம் போடுறீங்களாங்க?” “ம்ம்…” “ஏங்க தனியா கஷ்டமா இருக்கா?“ கேள்விகளை அடுக்கிக் கொண்டேப் போவாள்.. எனக்கு அவள் உடனில்லாததை விட பசியோ, உறங்கா விழிகளோ மாத்திரைகளின்றி உள்ளிறங்கும் மரணமோ தொண்டைக்குழி அடைப்பதில்லை.. மாத்திரைகளை விழுங்கக் கூட மறந்து அவளை நினைத்துக் கொள்கையில் குணமாகிப் போகிறது என் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சொல்லிக் கொள்ளலாம் ‘நாம் சரியாகத் தானிருக்கிறோம்’

யதார்த்தமாக சுயம்புவாக சுழலும் உலகமிதை தனக்கு வசியப்படவேண்டி மனிதனிட்ட கோடுகளின் வழிதான் அழிகிறது நம் உண்மை முகங்கள்; கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற ஓட்டைகளையிட்டே நிகழ்த்தப்படுகிறது அநீதிக்கன வாசலடைப்பும் அவைகளுக்கான அளவீட்டுத் திணிப்புக்களும்; சரி தவறு சிக்கல்களிலிருந்தே மாறுபடும் மனிதனுக்கு விலங்கும் புரியாமல் கடவுளும் புரியாமல் சாகும்வழியே கொஞ்சம் வாழ்ந்துகொள்வது புரிவதேயில்லை; புரிவதேயில்லை; சாட்சிக்கு நான்கு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

42, உடல்நெய்யும் சாபக்காரி..

அவள் பாவம்.. அவளின் உடம்புதான் அவளுக்கு சோறுபோடும் எந்திரம் அவளின் உடம்பு தான் அவளின் உயிர்குடிக்கும் சாபமும்., உடம்பை உடம்போடு எரித்துதான் சோறு சமைக்கிறாள் உடல்நெய்துதான் ஆடை அணிகிறாள் குழந்தை வளர்க்கவும் கணவன் குடிக்கவும் உடல்தான் அவளுக்குப் பணமாகிறது., இரவின் அழகை உடுத்தி உடம்பின் வெளிச்சத்தில் மயக்கி குவியும் பணத்தில் சோகந் தாங்கி சொர்கத்தின் வாசலைத் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

41, என் தோழிக்கும் எனக்குமொரு காதலிருந்தது..

கவிதைகள் உரசிக்கொள்ளும் இரவின் மொழிதனில் பிறக்கிறது உனக்கும் எனக்குமான சிநேகம்.. இருட்டை உடைத்துப் பிறக்கும் கனவுகளில் தேடிக் கிடைத்த உனக்கான வசியச்சொற்களின் அலங்காரத்தோடு திறக்கிறது கண்களும் மனசும்.. கொட்டித் தீர்க்கும் ஆசைகளை வானம் மடிந்துகொள்ளும் மனசிரண்டில் பதுக்கிக்கொள்ள முதலில் கேட்ட உன் பார்வைக்கே பரிசும் காதலும்.. எழுதிக் கரையாத உணர்வுகளாய் ஏக்கத்தின் பெருமூச்சொன்று வெளிச்சேர்ந்த தருணத்தில் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்