Tag Archives: கவிதை

மதம் – இன்றைய பார்வையில் (11)

மனிதன் – தன் தலைமேல் இட்டுக் கொண்ட முதல் தீ – மதம்! அணுகுண்டு வீசாமல் வெடிக்கும் மனிதக் கொல்லி – மதம்! கடவுளை காட்ட புறப்பட்டு கொலை கொள்ளை கற்பழிப்பை கூட தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி – மதம்! மனிதனை மனிதனாகவும் மிருகமாகவும் – வளர்க்கும் சக்தி – மதம்! இறைவனை சென்றடைய … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

கொசு (10)

சாக்கடை பிரிதிநிதிகளின் பறக்கும் பட்டாளம்; சமூக சீர்கேடர்களின் கண்ணெதிர் ஆதாரம்! பசிக்கு நோய் பரப்பும் குழந்தைகளின் எம அவதாரம்; விரட்டி விரட்டி விட்டாலும் நசுக்கும் வரை ஓயாத அற்பத்தின் விலாசம்! மனிதன் செய்யும் தவறுகளுக்கு இயற்கை – மறைமுகமாக தீட்டிய டிங்கு காய்ச்சல் திட்டம்; சூரியன் அற்ற பொழுதுகளில் ரத்தம் குடிக்கும் – கொசு – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

பூ (9)

விதவையின் வெள்ளை நெற்றியில் முள்ளாய் குத்திய பூ; பெண்ணின் தாவணி கனவுகளில் மங்களமாய் மணக்கும் பூ! மரண சாலையில் – சுனாமி குவித்த பிணங்களாய் கசங்கி மிதிபடும் பூ; திருப்பதியோ திருத்தனியோ தொட்டுவிட்டால் திருப் பிரசாதம் பூ! தெருக்களில் கூவி கூவி விற்றவளின் வயிற்றுப் பசிக்கு – உணவு தரும் பூ; பூ பூவென கத்தியவளின் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

வெயில் (8)

உழைக்கும் வர்கத்தின் உடல் சுடும் நெருப்பு; வெயில்! இலையுதிர்ந்த மரங்களின் பசுமை பூப்பிக்கும் தகிப்பு; வெயில்! எட்டித் தொட இயலா சூரிய முகத்தை மண்ணில் பதிக்கும் பதைப்பு; வெயில்! மனித குல முன்னேற்றத்திற்கு வெளிச்சம் போர்த்திய எரிப்பு; வெயில்! பூமி சூழ்ந்த கடலை உறிஞ்சிக் குடிக்கும் உழைப்பு; வெயில்! உப்பையும் மழையையும் மண்ணுக்குக் கொடுக்க இயற்கை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

கருப்பு; கருப்பு; கருப்பு (7)

வெளிச்சத்தின் பிறப்பிடம் இருட்டின் தாய் நிறம் – கருப்பு; வண்ணங்களின் மூலாதாரம் வாழ்வின் அஸ்தமனம் பேசும் – மொழி கருப்பு! மூடதனம் தகர்க்க – மூச்சு விட்ட புரட்சி நெருப்பு – கருப்பு; சாஸ்திர சம்பிரதாய திநிப்புகளை தகர்த்து எரித்த தீ நாக்கு – கருப்பு! வெள்ளை போர்த்திய மனதின் உள்ளிருக்கும் உண்மை கருப்பு; மெல்ல … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக