Tag Archives: காதல் கவிதைகள்

30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ஓடி வந்து மூச்சிரைக்க உன்னருகில் வந்து நின்றேன் என்ன என்றாய் இதோ இது ஒரு புது நாவல் சாண்டில்யன் எழுதியது படி என்றென்.. “ஹே…. கள்ளா.. பொய் தானே சொல்ற – உள்ளே என்ன காதல் கடிதமா…??!!!” என்றாய்… எழுதி வைக்காமல் போனேனே என மனசு அப்படி துடித்தது! —————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

29 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

எங்கேனும் ஒரு பக்கத்தில் புரட்டிப் பார் உன்னிடம் சொல்லவேண்டிய ஒன்றை எழுதியிருக்கிறேன் என்றென் புத்தகம் முழுதும் புரட்டிவிட்டு ஏமாற்றத்துடன் இல்லையே’ என்றாய். உனக்குள் ஏதோ இருப்பது எனக்கு இந்த கணத்தில் உறுதியானது! ——————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

27 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

நம்மூர் கோவிலில் நீயும் நானும் ஒன்றாக சாமி சுத்தி வந்த நாட்களில்; நான் பார்க்காத நேரத்தில் நீயும் – நீ பார்க்காத நேரத்தில் நானும் பார்த்துக்கொண்டது சாமிக்கு மட்டுமே தெரியும்!! ————————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

26 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

கோவிலில் பிரசாதம் தருகிறார்கள். நீ ஓடிவந்து ஓடிவந்து வாங்கினாய். நான் கூட ரொம்ப பசியோ என்று நினைத்தேன். பிறகு வெளியே வருகையில் எனை வாழ்த்திய பிச்சை காரர்களால் புரிந்தது – நீ எனை பார்க்கத் தான் அத்தனை முறை வந்து போனாய் என்று!! —————————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

வா.. அந்த மரத்தில் ஒரு சொப்பு தூளி கட்டி அதில் காகிதம் சுற்றி அந்த காகிதத்தில் உன் பெயரையும் என் பெயரையும் எழுதினால் சாமி நம்மை சேர்த்து விடுமாம்; நாமும் கட்டி வைப்போம் நம் சமூகம் ஒருவேளை நம்மை பிரித்துவிட்டால் இந்த சொப்பு தூளி – நம்மை காதலர்களென்று சொல்லியே ஆடிக் கொண்டிருக்கும்!! ——————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக