Tag Archives: காதல் கவிதைகள்

14 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

உன் வாசத்தில் ஒரு சொட்டு உன் தாவணிப் பூவிலிருந்து விழுகிறது – அள்ளிப் பருகும் காற்றிடம் கோபம் கொண்டு – உன் தாவணியை பிடித்தேன் நான் எனை முறைக்க வில்லை நீ சிரிக்கவில்லை பார்க்கிறாய் பார்க்கிறாய் அப்படி பார்க்கிறாய் உன் தாவணி எடுத்து இரு கை நிறைத்து உயிர்வரை நுகர்கிறேன் நான் உன் வாசம் என்னுள்ளே … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

13 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

உன் கைகடிகாரப் பட்டையின் உள்ளே சொருகி வைத்திருந்த புகைவண்டியின் அனுமதி சீட்டு கீழே விழுந்து விடுகிறது. நீ எடுக்காமலே புகைவண்டியிலிருந்து இறங்கிப் போகிறாய். நான் தவற விட்டு விட்டாயோ எப்படியேனும் – எடுத்துக் கொடுப்பது போல் உன்னை அருகில் வந்து பார்த்து விடலாமென எடுத்துக் கொண்டு ஓடி வருகிறேன். நான் அருகில் வந்ததும் நீ சிரித்துவிட்டு … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

12 வார்த்தைகளில் மெல்ல மெல்ல..

என் இனியவளே வார்த்தைகளில் மெல்ல மெல்ல இதயம் தொட்டவளே, உள்ளிருக்கும் காதலுணர்வை பார்வையால் ஈர்தவளே, காலத்தின் வழி தடத்தில் – எனக்குமாய் உதித்தவளே, உன் வாழ்நாளில் ரசனைகளில் என்னையும் சேர்த்தவளே.. வா.. உன்னில் பதிந்த ஒரு நினைவெடுத்து கவிதைகளாய் பூப்பிப்போம்; உன் மௌனத்தின் புன்னகை உடைத்து – காதலாய் காதலாய் மலர்விப்போம் வா..!

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(11) மழையும்.. நீயும்.. காதலும்!!

உன் நினைவுகளை கேட்டு வாங்கியதில் கவிதையாக மட்டுமே மிஞ்சியது – உன் காதல்!

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

(10) மழையும்.. நீயும்.. காதலும் – வித்யாசாகர்!

வேறோர் வீட்டின் வாசல் கடக்கையில் கூட நீ அங்கே நிற்கிறாய்..   திரும்பி வரும் வரை கூட காத்திருக்கிறாய் –   மனசு கனத்து பார்வையில் – மறைக்க மனமின்றி   கேட்டால் மட்டும் பொய் சொல்லி போகிறாய் காதலிக்க வில்லையென;   அதனாலென்ன நான் நாளையில் இருந்து உன் வீட்டுப் பக்கமே வரப் போவதில்லை. … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக