Tag Archives: குறுங்கவிதை

43 அரைகுடத்தின் நீரலைகள்..

என் தவறுகளுக்கு தண்டனையாக தோல்வி வேண்டாம்; வேண்டுமெனில் – மரணம் கிடைக்கட்டும்! ——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42 அரைகுடத்தின் நீரலைகள்..

வாசலில் பூத்த மலர்களில்; நிறைய மலர்கள் எனக்கானதல்ல!! ———————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

41 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

வாழ்வின் சுவர்களில் கொட்டை எழுத்தில் எழுதப் படுகிறது மரணம்; படிக்க மட்டுமே நாளாகிறது! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

40 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

எத்தனையோ பேரின் மரணத்தில் நிகழ்வதில்லை பாடம்; என் வீட்டின் ஒரு சின்ன மரணம் மாற்றி விடுகிறது என் பாதையையும் வாழ்க்கையையும், வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில் பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில் நிகழ்கிறது – தனக்கான மரணம்! ———————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

39 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

யாரும் பயந்துவிடாதீர்கள் பயம் கொள்வதால் விட்டாசெல்கிறது மரணம்? விட்டு செல்லுங்கள் மரணத்தை துணிவிருந்தால் வந்து நம்மை பெற்றுக் கொள்ளட்டும் மரணம்; பெறாத மரணத்தில் எனக்கென்னவோ வாழ்வதாகவே தெரியவில்லை – நிறைய பேரின் வாழ்க்கை! ———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக