Tag Archives: குறுங்கவிதை

20 எப்படியோ நிகழ்கிறது காதல்..

காலங்களை கடந்தும் நிறைய மனசுகள் மாறாமலிருப்பதில்லை. மாறிப் போகும் போது மாறட்டும் என் மனசும். அதுவரை உனையே நினைத்திருக்க – உன் பார்வையை மட்டும் எனக்கு கடன் கொடு. உயிர்பிரியும் விளிம்பில் உனை மறக்கும் மனசு ஒருவேளை கிடைக்கலாம், அந்த கிடைப்பில் உன் பார்வைகளாவது மிட்ச்சப் படட்டுமடிப் பெண்ணே!! ———————————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

19 எப்படியோ நிகழ்கிறது காதல்..

இப்போதெல்லாம் நான் அதிகம் உன் நினைவோடு இருக்கிறேன்; உன்னை பற்றியே எண்ணுகிறேன்; உனை பார்ப்பதில் உன் அருகாமை கொள்வதில் முனைப்பாகிறேன்; காலத்திற்கும் நீ கிடைப்பாயா என்றே ஏங்குகிறேன்; கிடைக்காவிட்டால் என் நிலை என்ன என்றே உணராமல் எப்படி நிகழ்கிறதோ; இத்தனையும் உன்மேல்???!! ———————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

18 எப்படியோ நிகழ்கிறது காதல்..

உனக்கு ஒரு கடிதமெழுதினேன்.. கடிதத்தின் வார்த்தைகளில் எங்குமே காதலில்லை காதலிப்பதாய் சொல்லவில்லை காதல், அக்கறை மிக்கதெனில்; என் அக்கறையையும் காதலென உணர்க!! ———————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

11 உடைந்த கடவுள்..

உலகம் சுற்றி நடக்கும் கொடுமைகளால் ஒன்றிரண்டாய் தென்படுகிறது மனிதத்தின் தலை தென்படாத மனிதத்திற்கிடையே உடைகிறது கடவுள்! இருநூறு ஆண்டுகளுக்கு மேல் அடிமை பட்டு கிடந்த மண்ணில் புதைந்த உயிர்களின் மறந்த வலியால் – ஈழத்தில் நடந்த கொலைகளில் – உடைந்தது கடவுள்! தெருவெல்லாம் பிச்சையெடுத்து வழி நெடுகும் இரைந்த வறுமைக்கு வழி தேடாத அரசின் மெத்தனத்தில் … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 13

ஐம்பது சதவிகிதம் தள்ளுபடி; எல்லாமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த ஆடைகள்; இரண்டு வாங்கினால் ஒன்று இனாமாக தரப் படும்; வேறெங்குமே கிடைத்திடாத தரம்; இப்படியெல்லாம் ஏமாற்றித் தான் விலைபோகிறது – ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்!! ————————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்