Tag Archives: நீயே முதலெழுத்து..

18) பெண்களைத் தேடும் கண்கள்..

கண்குத்திக் கிழிக்கும் பார்வைகளில் வடிகின்றன காமப்பசிக்கான ரத்தம், இரத்தம் சுவைக்கும் மிருகக்கடலில் விட்டில்பூச்சிகளென விழுந்து – உடலாசைநெருப்பில் கருகிப்போகின்றன பல பெண்களின் முகங்கள்; பச்சைப் பச்சையாய் மணக்கும் – அம்மா அக்காத் தங்கைகளின் வாசமருத்து, எப்படி ருசிக்கிறதோ அந்த வெறும் தசையும் வளைவுகளும் உரிமையில்லாப் பார்வையும்; மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை கசக்கியெறிந்துவிட்டு … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

17) சமைக்கிறவன் சொல்லாதக் கதை…

நாலுச் சுவத்துக்குள்ள வாழ்க்கைதாங்க – எங்க கட்டில்சுகமும் கனவுலதாங்க, சம்பளமெல்லாம் பெருசுதாங்க – அதைச் சம்பாதிச்சும் வாழ்க்கை நெருப்பிலதாங்க; சுட்ட பணம் பளபளக்கும் – மிளகாய்ச் சிவப்பாய் நாட்கள்கூடக் கடக்கும், அனல்’ல வெந்து சாகும்வரை – நாங்க சமைக்கும் சோறு மணமணக்கும்; நொந்த மனசு நெடுநாள் வலிக்கும் – கரண்டி துழாவி’ தெரியும் முகங்களைப் பார்க்கும், … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

16) மண் தின்ற மழையே…

மழையே! மழையே! எம் மண்தின்ற மழையே.. உயிர்வெள்ளத்தின் கருசுமந்த மழையே.. என்செய்தோம் யாம்.. வயிரருத்துப் போட்டதுபோல் எம் மண்ணறுந்துப் போனது பலகாலம் மழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும் பாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்; மழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல எதை சேர்த்துவைக்க எம் மழையே ? ஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

15) அ.. ஆ.. சொல்லுமழகில் உயிரெல்லாம் அன்பு நிறையும்!!

மரமெல்லாம் பூப்பூக்கும் பூவோடு இலைக் கணியாகும் கணியோடு’ தின்று நிற்க நிழலாகும் நிழலுக்குப் பின் விறகாகும்; விறகெல்லாம் நெருப்பாகும் நெருப்பெல்லாம் எரிந்து விளக்காகும் விளக்கில் வெளிச்சம் பூக்கும் வெளிச்சத்தில் வாழ்க்கை நமக்கே வசமாகும்; மனசெல்லாம் ஆசை நிறையும் ஆசையில் அன்பு மலரும் அன்பில் நெருக்கம் தீயாகும் – உடல்தீயின் தகிப்பில் வீடெல்லாம் மழலைச் சிரிக்கும்; செடியாகி … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

13 என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்….

வாழ்வின் பாடங்களில் கிழிந்த பக்கங்களின் ஒவ்வொன்றையும் எடுத்து தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால் ஒட்டிவிடுகிறாய்; இதயம் தைக்கும் ஊசியென என் அறுந்த மனதின் கிழிசல்களில் உன் நிறைவுறாத வார்த்தைகளைப் போட்டு பிறந்த பயனை நிரப்புகிறாய்; தத்தி தத்தி நடந்துவந்து எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில் என் மெத்த கர்வத்தையும் இலகுவாக உடைத்து உடைத்து வீசுகிறாய்; நீ … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்