Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

ஞானமடா நீயெனக்கு (50)

என்னவோ வளர்கிறாயடா நீ ஏன் நான் கண்டிக்கிறேன் என்று கூட புரிய மறுக்கிறாய்; உன் நிராகரிப்பில் நான் எத்தனை உடைகிறேன் என்பதை நீ புரிந்துகொள்ளும் காலம் வரை காத்திருப்பது – ஏதோ என் தவறிற்கான இறைவனின் தண்டனை என்று நினைத்துக் கொள்கிறேன்!! ——————————

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (49)

குழந்தைகளில் மிக சிறந்தவன் நீ என்று நினைப்பேன்; உண்மை தான் மிகச் சிறந்தவன் நீ, அதனால் தான் என்னை உனக்கு பிடிப்பதில்லை போல்! ———————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (48)

உனக்கு காய்ச்சலென்று முடியாமல் மடி மீது படுத்திருக்கிறாய், உன் வலி தாளாத முகம் பார்க்க பார்க்க என் ஏழேழு பிறப்பினையும் சபிக்கிறது மனசு! —————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (47)

நீ முடியாமல் ம்.. ம்.. என்று உம் கொட்டி படுத்திருக்கிறாய் உன் – ஒவ்வொரு ம்.. சப்தமும் எனை கொண்று கொன்றே பிறப்பிக்கிறதென – உன் காய்ச்சலுக்குத் தெரிவதேயில்லை! ——————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (46)

மருத்துவமனைக்குப் போகிறோம் ஊசி போடவேண்டுமென்கிறார் மருத்துவர், நீ என்னவென்று தெரியாமல் சிரித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாய் அவரும்சிரித்துக் கொண்டே உன் புட்டத்தில் ஊசி வைத்து குத்தியெடுக்க வீல்!!!!!!!!!!!!! என கத்துகிறாய்… சரிப்பா.. சரியாகும் சரியாகும் என்கிறேன் நீ என் மார்பினை கட்டி இறுக்கி வலியை தாளாமல் கண்ணையிறுக்கி அழுத்தியதில் உன் கண்ணீர் முழுதும் நானாக கரைந்தே போனேனடா.. … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக