Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

156 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

யாரை காக்க யாரை கொல்வதோ?   யாரை கொண்டால் நீதி மிஞ்சுமோ..?   யாரை கேட்டு யார் திருந்துவரோ?   யாரும் யாதுமாகி போகாதலில் – இன்னும் யார் யார் போவரோ பராபரமே???   இன்னும் என்னென்ன ஆகுமோ பராபரமே???? ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

7 சுட்டு எரிந்ததொரு காடு..

யார் மரணமும் யாரையுமே நோகவில்லை  முடிவில் – முள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய் கனத்தது உலக தமிழரின்; கல்மனசு! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6 சுட்டு எரிந்ததொரு காடு..

போர் போரென கதறிய கத்திய அவலகுரலில்; செவிடாகிப் போயினர் உலகத்தினர், ஊமையாகிப் போயினர் தமிழர்கள்! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

5 சுட்டு எரிந்ததொரு காடு.. (64)

ஆணும் பெண்ணும் குழந்தையுமென – கொன்று குவித்தவனுக்கு பெயர் போர்வீரனும், கொள்ளப் பட்டவனுக்குப் பெயர் தீவிரவாதியுமெனில்,   சொன்னவனை இனி சிங்களனென உரைப்போம்! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

4 சுட்டு எரிந்ததொரு காடு.. (63)

தாய்மை பூண்ட பெண்களின் அடி வயிற்றில் பற்றி எரியட்டும்; முள்ளிவாய்க்காலின் இழப்பும் ஈழக் கனவும் – காரணம், ஆண்கள் விட்டதை பெண்களாவது பிடிக்கட்டும்!  ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக