Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

ஞானமடா நீயெனக்கு – 34

எப்படியோ – வேண்டாமென்று நினைத்து நினைத்தே எதையேனும் உனக்கு வாங்கி வரும் பழக்கத்தை உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன். வேறென்ன செய்ய – அப்பா என்று நீ ஓடிவந்து என் கையை விரித்துப் பார்க்கையில் ஒன்றுமில்லாது – ஏமாந்து போவாயோ என மனசு உடையும் வலி – வாங்கி அரும் அப்பாக்களுக்கே புரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு

சந்த கவியின் குரலை சிங்க குரலில் வென்றவனே; சின்ன பிள்ளை சிரிப்பில் நெஞ்சம் கொள்ளை கொண்டவனே; கொட்டும் மழை போல இடி முட்டும் மேடைக் கொம்பனே; படை கட்டி எவர் வரினும் சற்றும் சலிக்கா வம்பனே; சங்க கவி போல மாதவி சொந்தம் கொள்ளும் மன்னனே; பெற்றோர் உற்றாரெல்லாம் மகிழ உயர்வாய் வாழ்ந்துக் காட்டு இன்பனே; … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 33

உன் காதலி கூட உனக்கு – இத்தனை முத்தம் கொடுப்பாளோ என்னவோ; அத்தனை முத்தத்திற்கு பிறகும் உனையே நினைக்கிறது மனசு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 32

உண்மையில் – நீ என் மகன் என்பதை விட நான் உன் அப்பாயெனும் மகிழ்வில் மீண்டும் மீண்டுமாய் பிறக்கிறேன்; உன் ஒவ்வொரு சிரிப்பிலும் பூக்கிறேன்; நீ அழுத கணத்தில் உடைகிறேன்; நீ வளர வளர – என்னை நானே தொலைப்பேனோ என்ற பயத்திலும் – உன்னை வளர்க்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 31

கதவோரம் – ஒளிந்துக் கொண்டு பார்ப்பாய், ஓடி வந்து – கட்டிப் பிடித்துக் கொஞ்சுவாய், உயிர் மென்று குடித்துவிடுவதாய் எனை தேடிக் கதறுவாய் – இதெல்லாம் உனக்கு நினைவற்று போகும் நாளில் நானென்ன ஆவேனோ!!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக