Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

பிரிவுக்குப் பின் – 62

கவிதைக்கு பரு பொருள் ஞானமல்ல; வலி என்பதை – நீயில்லாத கால இடைவெளியில் – கனத்து நிற்குமென் கவிதைகள் சொல்கின்றன!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 61

உனக்குப் பிடித்தமான உணவுகளை – நீயில்லாத பொழுதில் தின்கையில் கண்ணீரின் உப்பு அதிகமாக தான் கரிக்கிறது!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

89 வாழ்க்கையை படி!

நிறைய நிரபராதிகளின் வாதம் – சிறை கம்பிகளுக்கிடையே நின்று – உலகை வெறித்தாலும், வெளியே நிற்கும் குற்றவாளிகளுக்கு வெறும் – பணம் தரும் சிரிப்பு பணம் தீரும்போதே நின்றும் விடுகிறது! நிற்க, இங்கே சிறைக் கம்பிகளுக்கிடையே வீழ்ந்த ‘நியாயமே’ பேசப் பட வேண்டுமெனில் – நிரபராதிகள் காலத்தின் கேள்வியாய் சிறைகம்பிகளுக்கு மத்தியில் நில்லாமையை நீயும் நானும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

90 வாழ்க்கையை படி!

குடிப்பவன் குடிக்கிறான் நல்லவனென நடிப்பவன் நடிக்கிறான், இருப்பவனின் நாற்றம் வெளியில் தெரிவதில்லை. இல்லாதவனின் நாற்றம் பெரிது படுத்தப் படுவதில்லை. இரண்டுக்கும் மத்தியில் பண்பாடு குலைகிறது அநாகரிகம் கூட நாகரீகமென மெச்சப் படுகிறது; காலமாற்றம் என்னும் ஒற்றை பெயரில் – நிறைய பேர் தவறாகவே பதியப் பட்டிருக்கிறோம் – கால ஏட்டில்!!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

91 வாழ்க்கையை படி!

ஊரெல்லாம் மரணமும் மல்லிகை தோரணமும் வேளை வேளைக்கு சோறும் உடுத்த பட்டாடையும் மினுக்க அத்தனையும் இருந்துக் கொண்டு தானிருக்கிறது; இறப்பவரை பற்றியும் அழுபவரை பற்றியும் வருந்தாத இடத்திலிருந்தே – சிரிப்பவருக்கும் – மினுக்குபவருக்கும் மரணுமும் மல்லிகையும் மறுபரிசீலனை செய்யப் படுகிறது!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக