2) பாவம் பொடிபட மனிதம் புரிபடும்!!

டும் எறும்பு நசுங்கிப்போகும்
தின்ற மீனின் உடம்புநோகும்
வெட்டும் சதையில் பாவம் வடியும்
அது வாழ்வெங்கும் கூட வரும்;

பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம்
சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம்
உறவு புரியா மனதிற்குள்ளே
ஆயிரம் பூதம் கனமே சேரும்;

திட்ட கூட மனசு சாகும்
வார்த்தை அடியில் இதயம் கிழியும்
மனித எண்ண ஓட்டையில் – வாழ்க்கை
மரணமாக அடைந்துப்போகும்;

முடிச்சவிழ்க்கா சிக்கல் நேரும்
அவிழ்க்கும் தருணம் அறுந்தும்போகும்
உடைந்தப்பின்னே ஒட்டவைக்க – சில தருணமோ
இதயமோ வாய்ப்பின்றியே பிரிந்துநோகும்;

கொட்டித் தீர்க்கா எண்ணம் கொடிது
வெட்டும் வாளாய் வளரும் பெரிது
சுட்டும் விரல்கள் அசையும் பொழுதுள்
அது அறுக்கும் இலக்கு பிறப்பின் நெடிது;

கட்டில்கால்களாய் விதி மெலிந்திருக்கும்
உண்மையும் மனிதமும் தாங்கிப்பொறுக்கும்
பொய்யினால் சுடும் சொல்லில்
கட்டிலும் காலமும் உடைந்தே நொறுங்கும்;

வெடிக்க வெடிக்க தகரும் மலைதான்
சறுக்கச் சறுக்க நாம் இடறும் நிலைதான்
சிரித்து மகிழ்ந்து சிரிப்பைப் பகிர்வின்
நிலைக்கும்மகிழ்வில் நீளும் வாழ்க்கை,

மனிதம் புரிந்தால் நாலும் வாழ்க்கை!!
———————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக