விடுமுறைக்கு வந்த மகனும் அப்பாவும்..

 

 

 

 

 

 

 

கோடை விடுமுறையில் ஊருக்குப் போகிறோம்
பிள்ளைகள் வந்ததும் பெட்டியைப் பிரிக்கிறோம்
அம்மா அண்ணி தங்கை தம்பி எல்லோரும்
சூழ்ந்து நிற்கிறார்கள்
இந்தா இது அண்ணனுக்கு என்றேன்
அம்மா சிரித்தாள்
இந்தா இது தங்கை வீட்டிற்கு என்றேன்
அம்மா சிரித்தாள்
இந்தா இது அவளுக்கு என ஒரு ஜப்பான் புடவை தந்தேன்
அம்மா அதற்கும் சிரித்தாள்
அம்மாவிற்கென என்ன கொடுக்க
ஒரு இன்னொரு புடவையை எடுத்து நீட்டினேன்
அம்மாவிற்கு முகமெல்லாம் வெளிச்சம்
எல்லாம் முடிந்து வெளியே எழுந்துப் போகையில்
அப்பா வெளியே சாய்விருக்கையில் அமர்ந்திருந்தார்
அப்பாவிடம் அருகில் அமர்ந்து
நலமாப்பா என்றேன்
நல்லாருக்கேன்ப்பா என்றார்
சரக்கென்று ஏறி மாடிப்படியில் நடக்கையில்
உள்ளே சுருக்கென்றது, அப்பா நினைத்திருப்பாரோ
அவருக்கேதும் வாங்காதது குறித்து???

அப்பாவிற்கு எண்ணம்
மகன் மாடிக்குதானே போயிருக்கான்
எனக்கென்று ஏதோ கொண்டுவராமலா வந்திருப்பான்(?)!!
————————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to விடுமுறைக்கு வந்த மகனும் அப்பாவும்..

பின்னூட்டமொன்றை இடுக