நீயின்றி அமையாது உலகு…

 

 

 

 

 

 

 

 

 

 

 

1
ரு விடிகாலையின்
கனவுபோல நீ,
எதிரிலிருக்கமாட்டாய்
நினைவில் நிறைய இருப்பாய்..

தண்ணீரிலலயும் முகம் போல
உனது நினைவும் இங்குமங்குமாய் அலைகிறது
ஆனால் கொஞ்சம் கூட
மறைவதில்லை..

அதெப்படி மறையும்
நானின்னும் இறக்கவேயில்லையே.. (?)!!
——————————————————

2
னக்கான
எதுவுமே எனக்கு கனமில்லை

உன் பெயர்
சொல்லுமிடத்தில் துயரேயில்லை

உனக்காக என்று எண்ணிக்கொண்டால்
எனக்கு கடலில் நடக்கலாம்
நெருப்பில் படுக்கலாம்

வேண்டுமெனில் கத்தியெடுத்து
எனது மார்பில் குத்திப்ப்ப்பார்,
வழியும் ரத்தம்கூட போகுமென் உயிருக்காக
வருந்திவிடாது; ஆனால்

கண்டிப்பாக
உனை  பிரிவதையெண்ணி தவித்தேபோகும்..
——————————————————

3
நீ
ரின்றி
அமையாது உலகு,
நீயின்றியும்
அமைவதில்லை நான்..

சப்தங்களால் ஆன
பிரபஞ்சமிவை;
உன்னால் மட்டுமே ஆன
பிஞ்சு இதயம் நான்,

இருட்டும் வெளிச்சமுமானவை
பொழுதுகள்;
நீயும் நீயும் மட்டுமேயானவன்  நான்!!
——————————————————

4
னை நினைப்பதைவிட
ஒரு பெரிய
தவமில்லை,

உனை மிஞ்சிய அழகாய்
எவருமே எனக்குத் தெரிவதில்லை,

உனை ஆராதிப்பதைவிட
மனசு வேறெதையுமே
அத்தனை ஆராதிக்க விரும்புவதில்லை;

அப்படியென்ன
‘பெரிய இவளா நீ’ என்கின்றனர் சிலர்

ஆம்;
எனக்கு நீ எப்போதுமே
பெரிய அவள் தான்..
——————————————————

5
தூ
க்கிலிடும் தருணம்
இறந்துவிடுவோமென
தெரிந்தும்
அவன் கடைசியாய் இவ்வுலகை
காணும் தருணம் எத்தனை மகத்தானதோ (?)

அத்தனை கனத்தோடுதான்
பார்க்கிறேன் உனை
ஒவ்வொருமுறை விட்டுப் பிரிகையிலும்..
——————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக