Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

71, யாரையும் நோகாத கனவுகள்..

வலிக்காமல் சலிக்காமல் நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல் நிஜம் பூத்த மலர்களின் – வாசத்தொடும், வரலாறாய் மட்டும் மிகாமலும், முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் – மல்லிகைப் பூக்க, ஒற்றை நிலாத் தெரிய, மரம் செடி கொடிகளின் அசைவில் – சுகந்தக் காற்று வீசும் – தென்றல் பொழுதுகளுக்கிடையே; வஞ்சனையின்றி – உயிர்கள் அனைத்தும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

42 என் அண்ணனின் தாய் பார்வதியம்மாள்; எனக்கும் தாயானாள்!!

எட்டியுதைத்த கால்களிரண்டை மார்பில் தாங்கி எமைச் சுட்டு ஒழித்த கைகளிரண்டை முறித்துப் போட்ட உலகம் தொட்டுநிலைக்கும் புகழது வானில் பறக்க – எமக்கு ஒற்றைத் தலைவனை காலம் – கணித்துப் பெற்றவளே ; சொந்தம் கடலென மண் நிறைந்தும் மருத்துவம் தேடி வந்தவளை – நெஞ்சங் கல்லாகி நிராகரித்த வஞ்சகத்தார் – சுவாசித்த சிறு மூச்சும் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மனிதர்களின் கோர முகம் – தாண்டவமாடும் – ஆடுகளம் – திரை விமர்சனம்!

என் தமிழ் படங்களிலிருந்து சிலர் தள்ளிவைத்திருந்த மக்களை; தெருவை; வாழ்தலை எடுத்து திரை படமெல்லாம் தூவிய வெற்றி மாறனின் வெற்றிப்படம் ‘ஆடுகளம்! வியக்கும்  பட்ஜட்டோ மயக்கும் ஆடம்பரமோ இன்றி என் சாதாரண மக்களின் கதையை திரையில் இயக்கி, காலத்திற்கும் அவர்களின் வாழ்க்கையை பதிந்துவிட்ட படம். ஒரு திரைப்படத்திற்காக நாலு பேர் வாழ்ந்து சென்ற படம்; ஆடுகளம். … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

“பூவும் நானும்” கனடா மாணவர்களுக்கு எழுதிய மற்றொரு கவிதை!!

தலைப்பு: “பூவும் நானும்” ஒரு பூவும் நானுமாகத் தான் பார்க்க எண்ணுகிறேன் வாழ்க்கையை ஆனால் பூ எனை வென்று தான் விடுகிறது; ஒரு நாள் முழுக்க வெளிச்சத்தை படிக்கிறது பூ, காற்றினை அணைத்து அன்பு செய்கிறது பூ, கடவுளிற்கே வாசனை கூட்டி சேவை ஆற்றுகிறது பூ, சிறு  உயிர்களான ஈ வண்டு பட்டாம்பூச்சிக்கு தேனை உணவாக … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“இயற்கை” கனடா பள்ளி மாணவர்களுக்கு எழுதிய கவிதை!!

தலைப்பு : “இயற்கை” இயற்கை; இறைவன் மறைந்து கொடுத்த கொடை; இயற்கை; தமிழரின் கடவுள் பற்றிற்கான விடை; விடையின் விளக்கம் சொல்கிறேன் சற்று காது கொடுப்பீர்களா???!!! வெளிச்சம் தந்ததால் இயற்கை சூரியக் கடவுளானது; தண்ணீரின் உயிர்ப்பினால் இயற்கை மழைதேவன்.. கடல்தேவியானது; பூமியின் இருப்பினால் விளைச்சளால் இயற்கை; பூமித் தாயானது; காற்றின் சுவாசத்தால் இயற்கை வாயுதேவன் ஆனது; … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்