Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

50. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

காவியங்களாய் பல காதல் – காலங்காலமாய் உண்டு! கால்கொலுசின் சப்தம் கேட்டு காதல் வந்த நம் உள்ளூர் கதைகளும் உண்டு! ஜாதி எரிந்து உயிர் கொளுத்திய அரக்கத் தன – சம்பவங்களும் உண்டு! மதம் தனக்கு இரையாக்கிக் கொண்ட காதலர்களின் கதறலில் பெற்றோர் – தனக்கான மானத்தை மட்டும் வென்று மனிதம் கொன்ற அவலமும் உண்டு! … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 25 பின்னூட்டங்கள்

49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பேருந்தில் – நீயும் நானும் அருகருகே அமர்ந்து செல்கிறோம் – மனதளவில் தூரம் தான் வானமும் பூமியுமாய் நீள்கிறது. வா ஒரு சின்ன தொடுதலில் பேசலில் முத்தமிடலில் மனமொன்றி வாழ்தலில் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்குவோம்; வா!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

48. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

எத்தனை லட்சியங்கள் உனக்கும் எனக்கும்; படிக்க வேண்டும் நன்றாக வளர வேண்டும் சமூகம் புரியவேண்டும் எதையேனும் சாதித்து – நான் – இன்னார் பிள்ளையென்று சொல்லல் வேண்டும் திருமணத்திற்கு முன் என் உறவுகளுடனான இருப்பை முழுதாய் வாழவேண்டும் என் அன்பில் பிணைந்தென் குடும்பம் உன்னை முழுதாய் ஏற்கும் வரை உனக்காய் – காத்திருக்கவும் வேண்டும். இதலாமென்ன … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

47. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உலகெல்லாம் எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள்; காதலில் தோல்வி என்கிறார்கள்; காதலால் தற்கொலை என்கிறார்கள்; காதலித்தால் தனிக் குடும்பமாய் போவோம் என்கிறார்கள்; காதல் ஏதோ கொடுப்பதும் வாங்குவதும் என்கிறார்கள்; அதலாம் தான் காதலென்றால் – யாரேனும் கேட்கும் போது நீயும் நானும் காதலிப்பதாய் சொல்லவே சொல்லாதே. காதலிப்பது – யாரிடமும் சொல்வதற்கல்ல காதலிக்க. காதலென்பது – எனக்கும் … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

46. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உனக்கும் எனக்கும் ஆயிரம் – பொருத்தமுண்டோ இல்லையோ எதையும் விட்டுக் கொடுக்க முனைந்ததில் – எதையும் ஏற்றுக் கொள்ள மனதொத்துப் போனதில் வீட்டில் கேட்காமலேயே கொடுத்துக் கொண்டோம் நம் காதலுக்கான சம்மதத்தை!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்