Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

தெருக் குழாய் (13)

குடிசைவாசிகளின் தெருக்கடவுள் உயிர் வாழ்தலுக்கான – ஏழைகளின் முதல் உணவு! வாழ்ந்ததற்காகான அடையாளத்தில் மறக்க மறுக்கும் – நினைவுச் சின்னம்! வந்து போவோருக்கு தாகம் தீர்க்கும் – எந்திர தன – கொடையாளி! வறுமை தீரா அரசின் கட்டளைக்கிணங்கி இயங்கும் – பகுதி நேர ஊழியன்; கஞ்சு சோறும் கால்ரூபாய் ஊறுகாயோடும் வயிறு நிறையும் மருந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

வீடு (12)

கோவில்களின் பிறப்பிடம் நான்கு சுவற்றாலான – மனசு! உடல் சுட்டெரிக்கும் கோபம் காமம் போட்டி பொறாமை வெற்றி தோல்வி மகிழ்ச்சி கண்ணீர் – அனைத்தும் சுமந்த மண் ஓவியம்! முயற்சியும் உழைப்பும் குழைந்துக் கொண்ட சாதனை! பண இருப்பை உலகிற்குக் காட்டிக் கொள்ளும் படோடாபம்! நிறைய பேருக்கு சுயமாக கிடைத்திடாத வாழ்நாள் கனவு! தெருவில் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

மதம் – இன்றைய பார்வையில் (11)

மனிதன் – தன் தலைமேல் இட்டுக் கொண்ட முதல் தீ – மதம்! அணுகுண்டு வீசாமல் வெடிக்கும் மனிதக் கொல்லி – மதம்! கடவுளை காட்ட புறப்பட்டு கொலை கொள்ளை கற்பழிப்பை கூட தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி – மதம்! மனிதனை மனிதனாகவும் மிருகமாகவும் – வளர்க்கும் சக்தி – மதம்! இறைவனை சென்றடைய … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

கொசு (10)

சாக்கடை பிரிதிநிதிகளின் பறக்கும் பட்டாளம்; சமூக சீர்கேடர்களின் கண்ணெதிர் ஆதாரம்! பசிக்கு நோய் பரப்பும் குழந்தைகளின் எம அவதாரம்; விரட்டி விரட்டி விட்டாலும் நசுக்கும் வரை ஓயாத அற்பத்தின் விலாசம்! மனிதன் செய்யும் தவறுகளுக்கு இயற்கை – மறைமுகமாக தீட்டிய டிங்கு காய்ச்சல் திட்டம்; சூரியன் அற்ற பொழுதுகளில் ரத்தம் குடிக்கும் – கொசு – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

பூ (9)

விதவையின் வெள்ளை நெற்றியில் முள்ளாய் குத்திய பூ; பெண்ணின் தாவணி கனவுகளில் மங்களமாய் மணக்கும் பூ! மரண சாலையில் – சுனாமி குவித்த பிணங்களாய் கசங்கி மிதிபடும் பூ; திருப்பதியோ திருத்தனியோ தொட்டுவிட்டால் திருப் பிரசாதம் பூ! தெருக்களில் கூவி கூவி விற்றவளின் வயிற்றுப் பசிக்கு – உணவு தரும் பூ; பூ பூவென கத்தியவளின் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக