Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

வெயில் (8)

உழைக்கும் வர்கத்தின் உடல் சுடும் நெருப்பு; வெயில்! இலையுதிர்ந்த மரங்களின் பசுமை பூப்பிக்கும் தகிப்பு; வெயில்! எட்டித் தொட இயலா சூரிய முகத்தை மண்ணில் பதிக்கும் பதைப்பு; வெயில்! மனித குல முன்னேற்றத்திற்கு வெளிச்சம் போர்த்திய எரிப்பு; வெயில்! பூமி சூழ்ந்த கடலை உறிஞ்சிக் குடிக்கும் உழைப்பு; வெயில்! உப்பையும் மழையையும் மண்ணுக்குக் கொடுக்க இயற்கை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

கருப்பு; கருப்பு; கருப்பு (7)

வெளிச்சத்தின் பிறப்பிடம் இருட்டின் தாய் நிறம் – கருப்பு; வண்ணங்களின் மூலாதாரம் வாழ்வின் அஸ்தமனம் பேசும் – மொழி கருப்பு! மூடதனம் தகர்க்க – மூச்சு விட்ட புரட்சி நெருப்பு – கருப்பு; சாஸ்திர சம்பிரதாய திநிப்புகளை தகர்த்து எரித்த தீ நாக்கு – கருப்பு! வெள்ளை போர்த்திய மனதின் உள்ளிருக்கும் உண்மை கருப்பு; மெல்ல … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

நவீன பொங்கல்!

இன்று தைப்பொங்கல். எல்லோரும் ஓடி தொலைகாட்சி முன் அமர்ந்துக் கொண்டோம்; நான் எட்டி சாமியை பார்த்தேன் சாமியால் எங்களையோ தொலைகாட்சியையோ சபித்துவிட முடிய வில்லை ; ‘பொங்கலோ பொங்கல்’ தொலைகாட்சி நிகழ்ச்சியில் கத்துகிறார்கள்; சாமி வெளியே வந்து எட்டிப் பார்கிறார் காஸ் ஸ்டவ்வில்லிருந்து பொங்கல் வெந்துவிட்டதென குக்கர் சத்தம் போட்டது; சாமி கரும்பை தேடினார் கரும்பு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்

பணம் தின்னி; பட்டுப் புடவை (6)

பட்டுப் புழுவின் உயிரில் நெய்த ஆபரண ஆடை! ஆயிரம் லட்சம் உயிர்களை கொன்ற கொலை வியாபாரம்! என் ஏழை சகோதரிக்கு என்றுமே கிடைக்காத கனவு அவதாரம்! என் தாயை கொள்ளியில் வைத்த பிறகும் எரிந்திடாத பட்டுப் புடவை! ———————————- வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

வட்டியும் கிட்டியும் (5)

பணம் பணம்னு அலைந்ததுல பொணம் தின்னும் பொழப்பு பாரு; கந்து வட்டி கிந்து வட்டின்னு ஏழை ரத்தம் இனிக்கும் பாரு! சுட்ட உடம்பில் சூடு போடும் – மிருக குணம் தொழிலு பாரு; வாரமானா வந்து நிற்கும் மாடி வீட்டு மைனர் பாரு! கூரை – பிய்த்து பிய்த்து எறிந்ததுல – வீட்ட; உசத்தி கட்டி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்