Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

வீட்டின் வாழும் அடையாளம் தலையணை (28)

இரவு நெருப்பின் இன்னொரு காதலன்; காதலி; மனசு பெறாத தூக்கத்தை மெத்தெனக் கொடுக்கும் தலையணை! வருடத்து வாசனைகளை மிச்சம் வைத்திருக்கும்; வந்தவர் போனவரையெல்லாம் நினைவில் முடிந்திருக்கும்; புதிய உறை மாற்றினாலும் – பழசு மறக்காத தலையணை! ஐம்பதிலிருந்து ஆயிரம் வரை விற்கிறது; ஆயிரங்களை கடந்து பழைய கந்தைதுணியில் கனக்கிறது; கனவும் தூக்கமும் வரவு என்பதால் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பியூட்டரா? கொக்கா; (27)

நினைத்ததை செய்தும் நேரத்தை விழுங்கும் போதை; விஞ்ஞானம் பேசி அஞ்ஞானத்திலும் ஆழ்த்தும் கண்டுபிடிப்பு; கணினி! வளர்க்கவும் கெடுக்கவும் தெரிந்த ஆசிரியன்; மின் சக்தியில் உயிர் பெரும் ஜடப்பொருள்;கணினி! உலகம் பற்றி – ஒரு சொடுக்கலில் காட்டும் வித்தகன்; மனிதன் விதைத்ததில் – விலையும் அறிவு ஜாலம்;கணினி! சான்றிதழ் இன்றி சர்வமும் கற்பிக்கும் கல்வியாலயம்; சரித்திரம் பேசி, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழும்போதே யோசிக்கலாம் வாங்க..

ஒரு தலைகீழ் நடனம் போலத் தான் வாழ்க்கை, எங்கோ எதையோ சுற்றித் எல்லாம் தெரிந்து கொள்வதற்குள் வீடெல்லாம் மரண வாடை! மரணம் விட்டொழியா வாழ்வென்றில்லை – மீண்டும் பிறக்கும் பிறப்போ உறுதியென்றில்லை – எவர் வந்து சொல்லியோ, கேட்டோ ஜாதி கற்று; மதம் கற்று; இனம் பெற்று – மனிதன் மனிதனாக மட்டுமில்லை! அடுத்தவனை அடித்தால் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 5 பின்னூட்டங்கள்

மரணத்தை மீட்டெடுப்போம் (26)

இரண்டற கலக்காத நெஞ்சில் வஞ்சமற்று வாழ்கையில், கெடுத்தவனை திருத்த முயல்கையில், அடித்தவனை திருப்பி அடிக்கவும் – அணைக்கவும் முடிகையில், அன்புருதலில், இல்லாதாரிடம் இருப்பதில் – இயன்றவரை பகிர்ந்து கொள்கையில், இருப்பவரை கண்டு ஏங்கி நிற்காமையில், எத்துணிவு பெற்றும் பணிவுருகையில், பணிபவரை மதிக்க கற்கையில், மதியாதாரை புரிந்து கொள்கையில், தவறென்று கண்டால் பொங்கி எழுகையில், தன் தவறாயினும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்

பசியை ரசித்திரு.. (25)

எங்கோ ஒரு ஜீவன் ஒவ்வொரு பசி வேளையின் போதும் திருடவோ – ஏமாற்றவோ – பொய்சொல்லவோ – அல்லது இறக்கவேணும் தன்னை தயார் படுத்திக் கொண்டுதான் பசி தாங்கி அலைகிறது, புறம் நான்கும் பணம் இருந்தென்ன, உடுத்தும் ஆடைக்குபதில் கடை விற்றென்ன, கோடிகளை கொட்டி அடுக்கி வைத்தென்ன – ஒருவேளை பசியை – ரசித்ததுண்டா பணம் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்