Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

ஏனோ; இந்த வாழ்க்கை??? (24)

மூனு வேளை சோறு ஒரு வேளை ஆனது, பத்து மணிநேர தூக்கம் ஐந்து மணிநேரமானது, மாதத்திற்கு ஒரு முறை வெட்டும் – முடி கொட்டி – மொட்டைதலையானது, ஒரு நேர உடல்பயிற்ச்சிக்கும் அவகாசமின்றி – தொப்பை வேறு சட்டி போலானது, இனிப்பு தின்பதோ காரம் விரும்பித் தின்பதோ சிகடை, தேன்மிட்டாய், கைவிரல் அப்பளம், அச்சுமுறுக்கு, தட்டை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

சண்டை + சண்டை = சுயநலம் (23)

கூறு கெட்ட மனுஷன் மேல; கூவம் நாத்தம் தாங்கல; மானங்கெட்ட மனுஷன் மேல கோபம் மட்டும் தீரல! மானம் ரோசம் கோபம் போச்சி சண்டை மட்டும் மிச்சமாச்சி.. சண்டை சண்டை சண்டை எங்கப் பார்த்தாலும் சண்டை… சோறு தின்ன சண்டை துணி எடுக்க சண்டை மாடு வாங்கி மேய்க்க சொன்னா அதிலும் – உன் மாடு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்

கடல் எழுதும் கதை (21)

மனம் போல் அழகான – நீளமான கடல். கரை ஒதுங்கும் அலையின் சில்லென்ற ஈரத்தில் கால்வைத்து – இதயம் நனைத்துப் பூக்கும் நீலப் பூக்களுக்கிடையே.. கிரீச் கிரீர்ச்சென்று கத்தாத, பட்டாம்பூச்சிகளாய் இறக்கை அடித்துப் பறந்திடாத, மாறிமாறி வரும் அலைகளை விண்ணைத் தொடும் சந்தோசத்தில் தொட்டு தொட்டு – பூரித்த கைகால் முளைத்த தாமரைகளுக்கிடையே.. ஒரு கவிதை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

வெளியூர் வாசிகளின் வலி (22)

இதயம் கீறி எழுதும் ரத்தம் சிந்தா வலிகளை சுமந்து தான் வளைகுடாவில் நகர்கிறது வாழ்க்கை; பிறந்த மண், வீடு, மழை, காற்று, மலர்களின் வாசமும்.. இடி, காகம், குழந்தைகளின் பேச்சு, நாய் குறைப்பு, மாடு கத்தும் ஓசையும்.. பசும்புல் கால் நனைக்கும் பனியின் ஈரம், காலை நேர தேனீர், சுட சுட ருசிக்கும் சிற்றுண்டி, வேளை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்!

நிறைய அலமாரிகளில் பணம் அடுக்கப்பட்டு வயிறுகளில் பசி இறுகக் கட்டி பட்டில் ஆடையுடுத்தி மாற்றுப் புடவைக்கு பிச்சையெடுத்து விமானத்தில் நடுக்கடலில் பட்டப்பகல் – நட்டநடுத் தெருவில் வாகன நெரிசலுக்கிடையே திருமணம் நடத்தி முதிர்கன்னிகளை ஆங்காங்கே திரியவிட்டு பெண்களின் கற்பு பேசி விலைமகள்களுக்கு – வீடமைத்துக் கொடுத்து ஜனநாயக தேசமென மார்தட்டி – எடுத்ததற்கெல்லாம் ஜாதி கேட்டு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்