Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

வெற்றுப் பிணம் நாம்!!! (20)

மனதின் – நீள அகலங்களில் எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்; வெளியில் தெரியாமல் உள்ளழுத்தும் வலிகளுக்கு எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை; எதையோ தேடி யாரையோ நினைத்து எங்கோ மனது கிடந்து அலையும் தருணங்களில் அழுதுவிடாத வருத்தங்கள் சுடத் தான் செய்கின்றன; வெற்றியை தலைமேல் சுமந்து எத்தனை தெருக்களில் நடந்துத் திரிந்தாலும் தோற்கும் வினாடிகள் வெற்றியின் சிகரத்தை வீழ்த்தாமலில்லை; என்ன … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு விதவையின் நெற்றி சுடும் – பொட்டு (19)

பொட்டு ஒரு விதவையின் – நெற்றி சுடும் பொட்டு; பெண்ணின் அடையாளத்தை சிவந்து காட்டும் பொட்டு; வெற்றியின் உச்சத்தை பறையறிவிக்கும் – ஒற்றை திலகம் பொட்டு; குடும்ப பெண்களின் அழகிற்கு இன்னொரு – ஆபரணம் துறந்த அழகு பொட்டு; நெற்றிக் குளிர்ச்சியில் – புத்தி திருத்தும் – செஞ் சூரணம் பொட்டு; ஸ்டிக்கரில் ஒளிந்து மடிந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

அவள் இறப்பாளென்று தெரியாமல் ஓட்டிய – மிதிவண்டி! (18)

அரைபெடல் அடித்தே உலகம் சுற்றிய காலமது! விழுந்து முட்டி உடைந்த பல தடவைக்குப் பிறகும் – மிதிவண்டி ஆசை விட்டதேயில்லை! அப்பாவின் – பழைய ராலி சைக்கிள் தாண்டி BSA SLR கனவு மிதிவண்டியாகவே கடந்துவிட்டது வாழ்க்கை! நானும் அண்ணனும் ஊர் ஊராய் சுற்றியதும்; என் ஒரே தங்கை இறந்துப் போவாளென்று தெரியாமல் அவளை மிதிவண்டியில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

அது வேலையை அது செய்தது; நீ என்ன செய்தாய்!

தெருவோரம் நடந்து சென்றேன் இன்று குடியரசு தினம் வாவென கொடி குத்திவிட அழைத்தார்கள். ஐயோ தேசிய கொடியாயிற்றே சற்று பொறுயென்று சொல்லிவிட்டு ஓடி – குளித்து சுத்த ஆடை அணிந்துவந்து தேசிய கொடியை – மார்பின் மேல் குத்திக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்; என் ஒற்றை வயது குழந்தை ஓடிவந்து – கொடியை தொட்டு தொட்டுப் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 4 பின்னூட்டங்கள்

சோறு கிடைத்தவனுக்கு கொடி பறக்கும் நாள்! (குடியரசு நாள்)

தெருவுக்கு தெரு டாஸ்மாக் வீட்டுக்கு வீடு தொலைகாட்சி மனிதனுக்கு மனிதன் அரசியல் கட்சி மண்ணாங்கட்டி பொழப்புக்கு வாய்க்கு நூறு இங்கிலீசு மரத்திற்கு மரம் சிரித்துக் கொண்டன; யாருக்குமே வெட்கமில்லை! படிப்பு முடியும் முன்னரே பாரின் படித்து முடித்தாலும் வெட்டி சோறு பாதி நாள் வேலைக்கு போனால் – மீதி நாள் பிகரு வெட்டும் சோம்பேறி சுயநலப் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 15 பின்னூட்டங்கள்