Category Archives: கல்லும் கடவுளும்..

திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)

எனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்! மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்! நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

உடம்பு சுடும் சூரியனை விழுங்கி மிதிக்கும் வரப்பெல்லாம் வியர்வையால நனைச்ச மண்ணு உழவர் உயிரைப்பறிக்கும் பச்சமண்ணு; புலரும் காலைப் பொழுதை எமக்கு ஒப்பாரியா கொடுத்த மண்ணு படி அரிசி நெல்லு தேடி தெருவெல்லாம் எமை விதைச்ச மண்ணு; பாவிமக பொறந்த நேரம் பச்சவயல் காயுந் தூரம் வாழ்க்கையது விடியலை சாமி, ஒரு மரணம் கேட்டும் கிடைக்கலை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போதைச் சேற்றில் மனித நாற்றுகள்..

தெரு தெருக்குச் சாராயம் வழிநெடுக்கப் போராடும் வறுமைக்குக் குழிதோண்டும் வாழ்க்கைக்கு பாதாளம்! இளமைக்கு இடராகும் இயற்கைக்கு எதிராகும் இன்பத்தின் எல்லையிலும் போதை; துன்பத்தின் துளிராகும்! கல்விக்கும் கால் சறுக்கும் கடலில் உப்பாய்ச் செல்வங் கரையும் சந்ததிக்கும் குடிகாரப் பழிசூட்டும்; சாகும்போது(ங்)கூட ச்சீ இவனான்னு பிறர்வாயில் பிறப்பு நாறும்! ஒருநாள்னு குடிப்பவனும் ஓலைக் குடிசையில் அடிப்பவனும் மாடிவீட்டில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..

ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்! மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

செவிலித் தாயிக்கு மனசு வானம் போல..

பிணம்தின்னும் சாமியிடம் வரம் கேட்கும் பூதங்கள், மலமள்ளி மூத்திரம் துடைத்தும் மனதால் மணக்கும் சாமிகள்; அறுந்தக் கழுத்தில் ரத்தம் கசிய கண்ணீரால் கழுவும் தெரசாக்கள், தாயைப் போல கருணைப் பொங்க ஆலயம் தொழும் தெய்வங்கள்; நீதி தேடி ஒதுங்கிடாது சேவை- யாற்றும் தேவதைகள், பாவமூட்டையை தான்சுமந்து வியாதியை போக்கும் சகோதரிகள்; காலவிளக்கை ஊதிவிட்டு; கருணையில் தலைகோதும் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக