Category Archives: கல்லும் கடவுளும்..

கழிவுநீரில் களவுபோன மனிதம்..

அந்தத் தெருவை கடக்கும்போதெல்லாம் அந்தக் கழிவுநீர் தொட்டியும் கண்ணில் படுகிறது கால்களங்கே தானே நகர்கிறது உடல்கூசும் கழிவுநீர் நாற்றம் – நாசியை துளைக்கிறது, குடல் புரண்டுவிடுமளவின் வாடையில் மூக்கை மோவாயய் மூடிக்கொண்டவனாய் எட்டி அந்த தொட்டிக்குள் பார்ப்பேன்; தலைநனையக் குனிந்து அலுமினியச் சட்டியில் தண்ணீர் மோந்து வெளியே ஊற்றும் உள்ளேயிறங்கி அடைப்பெடுக்குமந்த வயதானவர் இருக்கிறாராயென்று பார்ப்பேன்; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..

1 ஒவ்வொரு பனிக்காலத்திலும் கவிதைகளைச் சொரிகிறது வானம், எழுதப்படுபவை வாசிக்கப்பட்டுக் கொள்வதைப் போல ஒவ்வொரு புரட்சி வெடிக்கையிலும் ஒற்றுமை நிலைக்கையில் விடியலும் பிறக்கிறது., அடுத்தடுத்து வரும் பனிக்காலப் பூக்களின் இதழ்களில் சொட்டிவடியும் நீர்முத்துக்களாய் ஓடிவிளையாடும் சிறுவர்களின் சிரிப்பில் அவர்களுக்கு அறியப்படாமலே ஒட்டிக்கொண்டிருந்தன விடுதலையின் சிலிர்ப்பும்.. மகிழ்ச்சியின் ஆர்ப்பரிப்பூக்களும்.. ———————————————————————————— 2 புற்களின் நுனியிலிருந்து விடுபட்டு மண்ணில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா!!

நாங்களெல்லாம் அப்போது சிறுவர்களாக இருந்த சமையமது அம்மா இல்லாத வீட்டை எங்களுக்கு பிடிப்பதேயில்லை அம்மா இல்லாத அந்த வீடு இருண்டுப் போன மாதிரியிருக்கும் யாருமேயில்லாமல் தனித்துவிடப்பட்டதொரு படபடப்பில் எல்லோரும் அமர்ந்திருப்போம் இரவு நெருங்கநெருங்க மனசு அம்மா அம்மா என்று ஏங்கும் எனக்குக் கொஞ்சம் அழுகைவர தம்பிகளும் அழுதுவிடுவார்களோ என்றஞ்சி அழுகையை அடக்கிக் கொள்வேன் என்றாலும் சற்று … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காதலால் கருகி கசிந்துருகி.. (வினோதினி)

உன் முகம் தீய்ந்த தீயில் அமிலங்கள் நெஞ்சில் சுரக்கின்றன வாழ்நாளின் பக்கங்கள் கண்ணீரில் கடக்கின்றன; சமூகத்தின் குற்றத்தில் காதலும் கைதானதே – தான் தைத்த நாகரிகச் சட்டையை தன் கையால் கிழித்துப் போட்டதே; கண்ணில் தூசெனில் துடிக்கும் கரங்களிரண்டில் கசங்கிப் போய் வீழ்ந்தவளே இன்று காணாமல் போனதேன்…? காலத்தின் தீர்ப்பில் கலையும் மைவாங்கி வாழ்க்கையை திருத்த … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40, எனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்..

1 என்னைச் சுற்றி எதிரிகளும் அதிகம் நிற்கின்றனர்; உலகின் யதார்த்தம் என்றெண்ணி அவர்களையும் கடந்துச் செல்கிறேன், நல்லதை விட கெட்டது கேட்காமலயே நடந்துவிடுகிறது; உண்மை கெட்டதையும் கடந்துவிடுமென்று அதையும் மறக்கிறேன், என்னைச் சரியென்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் முன்பே தவறென்று முன்நிற்கிறது உலகம்; தவறுக்கு எங்கேனும் நான் காரணமாகியிருப்பேனென்று எனைமட்டுமே தண்டிக்கிறேன் நான், உலகின் அசைவுகளில் எல்லாவற்றிற்கும் அததற்கான … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்