Category Archives: கவிதைகள்

வெற்றுப் பிணம் நாம்!!! (20)

மனதின் – நீள அகலங்களில் எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்; வெளியில் தெரியாமல் உள்ளழுத்தும் வலிகளுக்கு எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை; எதையோ தேடி யாரையோ நினைத்து எங்கோ மனது கிடந்து அலையும் தருணங்களில் அழுதுவிடாத வருத்தங்கள் சுடத் தான் செய்கின்றன; வெற்றியை தலைமேல் சுமந்து எத்தனை தெருக்களில் நடந்துத் திரிந்தாலும் தோற்கும் வினாடிகள் வெற்றியின் சிகரத்தை வீழ்த்தாமலில்லை; என்ன … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 3 பின்னூட்டங்கள்

50. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

காவியங்களாய் பல காதல் – காலங்காலமாய் உண்டு! கால்கொலுசின் சப்தம் கேட்டு காதல் வந்த நம் உள்ளூர் கதைகளும் உண்டு! ஜாதி எரிந்து உயிர் கொளுத்திய அரக்கத் தன – சம்பவங்களும் உண்டு! மதம் தனக்கு இரையாக்கிக் கொண்ட காதலர்களின் கதறலில் பெற்றோர் – தனக்கான மானத்தை மட்டும் வென்று மனிதம் கொன்ற அவலமும் உண்டு! … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 25 பின்னூட்டங்கள்

49. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

பேருந்தில் – நீயும் நானும் அருகருகே அமர்ந்து செல்கிறோம் – மனதளவில் தூரம் தான் வானமும் பூமியுமாய் நீள்கிறது. வா ஒரு சின்ன தொடுதலில் பேசலில் முத்தமிடலில் மனமொன்றி வாழ்தலில் வானத்தையும் பூமியையும் ஒன்றாக்குவோம்; வா!

Posted in காதல் கவிதைகள் | 4 பின்னூட்டங்கள்

48. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

எத்தனை லட்சியங்கள் உனக்கும் எனக்கும்; படிக்க வேண்டும் நன்றாக வளர வேண்டும் சமூகம் புரியவேண்டும் எதையேனும் சாதித்து – நான் – இன்னார் பிள்ளையென்று சொல்லல் வேண்டும் திருமணத்திற்கு முன் என் உறவுகளுடனான இருப்பை முழுதாய் வாழவேண்டும் என் அன்பில் பிணைந்தென் குடும்பம் உன்னை முழுதாய் ஏற்கும் வரை உனக்காய் – காத்திருக்கவும் வேண்டும். இதலாமென்ன … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்

47. எவரேனும் இப்படி காதலித்ததுண்டா…?

உலகெல்லாம் எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள்; காதலில் தோல்வி என்கிறார்கள்; காதலால் தற்கொலை என்கிறார்கள்; காதலித்தால் தனிக் குடும்பமாய் போவோம் என்கிறார்கள்; காதல் ஏதோ கொடுப்பதும் வாங்குவதும் என்கிறார்கள்; அதலாம் தான் காதலென்றால் – யாரேனும் கேட்கும் போது நீயும் நானும் காதலிப்பதாய் சொல்லவே சொல்லாதே. காதலிப்பது – யாரிடமும் சொல்வதற்கல்ல காதலிக்க. காதலென்பது – எனக்கும் … Continue reading

Posted in காதல் கவிதைகள் | 6 பின்னூட்டங்கள்