Category Archives: கவிதைகள்

உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!!

நீ பிறந்தாய் எனக்குள் ஒரு பூ பூத்து அப்பா எனும் வாசமாய் உடலெங்கும் கமழத் துவங்கியது.. பின் – நீ வளர வளர அந்த அப்பாயெனும் வாசத்தால் நானும் உலகெங்கும் மணம் பரப்பி மதிப்பால் நிரம்பி நின்றேன்; இன்றும் – உன்னிடம் நான் பெற்ற – பெரும் – பாடங்கள் ஏராளம், ஏராளம்; என் குழந்தை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

97 இதயவலி; இலவச இணைப்பு!!

காதல் மறுக்கப் பட்ட காதலியின் கால்கொலுசு சப்தங்கள்; இதயம் மரணத்தினால் துடிக்கும் துடிப்பு; துரோகத்தால் புடைக்கும் நரம்பு; பிரிவின் வலியின் அழுத்தம்; திருட்டு கொள்ளைகளால் எழும் பயம்; குழந்தை கதறும் அலறலின் கொடூரம்; பெண் கற்பழிக்கப் படும் காட்சிகள் மற்றும் கதைகள்; கொட்டிக் கொடுக்கப் படும் வட்டியின் வேதனை; உறவுகளின் சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும் குடும்ப … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!

ஊர்தாளி அறுத்த கதை உறவு மானம் பறித்த கதை என் தமிழர் ரத்தம் குடித்த கதை இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ; ஈழ-மது  மலரும் மலரும் என் பாட்டன் மண்ணில் உறவுவாழும் காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா; ஊருவிட்டு; வந்தவன் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

நாட்கள் தொலைத்திடாத அந்த நினைவுகளில் சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ; உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய முதல் பொழுது முதல் தருணம் – உடையாத கண்ணாடியின் முகம் போல பளிச்சென இருக்கிறது உள்ளே; ஓடிவந்து நீ சட்டென மடியில் அமர்ந்த கணம் என்னை  துளைத்து துளைத்து பார்த்த இருவிழிகள், எனக்காக  காத்திருக்கும் உனது தவிப்புகள் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

40 விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு விலைபோகும் ஓட்டு எந்திரங்களல்ல – நாம் நாளைய விதியை இன்றெழுதும் தேர்தல் பிரம்மாக்கள்; இலவசத்தில் மதிமயங்கி எடுத்து வீசிய ஊழல் பணத்தில் வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம் தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும் மண்ணின் – உரிமை குடிகள்; போட்டதை தின்று விரித்ததில் தூங்கிப் போகும் புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்