Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

உடைந்த கடவுள் – 23

மூச்சுப் பிடித்து கேட்டு வாங்கிய வரதச்சனை பொருட்கள் வெறுமனே பரணையில் தூசியுற்றுக் கிடந்தது; அண்ணாவின் கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை அந்த தூசிகளுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் தெரிந்தாவிடும்?!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் -22

குழந்தையோடு தாய்வீடு சென்றிருதேன் ஒரு நாள் மட்டும் குழந்தையை விட்டுவிட்டு போடி என்றாள் அம்மா, ஐயோ ஒருநாளா குழந்தையை விட்டுட்டு ஒருநொடி கூட இருக்க முடியாது; உயிரே போய்விடும் என்றார் அவர். அம்மா நமுட்டாக சிரித்தாள், காலத்தின் நீதியும் அம்மாவின் சிரிப்பும் எனக்குப் புரிந்தது; அவருக்கு புரியவில்லை!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

21 தெருவை கடந்த பெரியவர்; விபத்து!

தெருவில் விபத்தாம் கூட்டம் விளக்கிப் பார்த்தேன் உலகத்தின் மொத்த உறவையும் அறுத்துக் கொண்டு விடை பெரும் தருணத்தில் ஒரு பெரியவரின் உயிர் இழுத்துக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக ரத்தம் சொட்டும் அவர் உடலை ஏற்றிக் கொண்டு போக ஆம்புலன்ஸ் வந்து நிற்கிறது. அவரின் மூக்கு கண்ணாடி மட்டும் தள்ளி சற்று தூரத்தில் நசுங்காமல் கிடந்தது. ஒன்றுமில்லை … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 20

கனவுகள் விற்றே கவிதைகளை வாங்குவார்களாம்; நான் உறக்கத்தையே கேட்காததால் – கனவுகளை வாங்க துணிவதில்லை!! ——————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 19

மணித்துளிகளை உடைத்து உள்புகுந்துக் கொள்கிறது கவிதை; புரியவும் அர்த்தப்படவுமே நாட்களும் – வருடங்களும் தேவை படலாம்! ———————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக