Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

31 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உன் பள்ளிக் கூடத்து வாசலில் வீழ்கிறது என் பார்வை. நீ வெளிவரும் நேரமோ என்று வாசல் நோக்கி நின்று விட்டேன். வெள்ளை சட்டை நீள பாவாடை. தேவதைகளை தோற்கடித்துவிட்டு நீ நடந்து வருகிறாய். வயது தாண்டி கற்பனை செய்ய துணியவில்லை என் மனசு, காதலிக்க மட்டும் செய்தது! ——————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ஓடி வந்து மூச்சிரைக்க உன்னருகில் வந்து நின்றேன் என்ன என்றாய் இதோ இது ஒரு புது நாவல் சாண்டில்யன் எழுதியது படி என்றென்.. “ஹே…. கள்ளா.. பொய் தானே சொல்ற – உள்ளே என்ன காதல் கடிதமா…??!!!” என்றாய்… எழுதி வைக்காமல் போனேனே என மனசு அப்படி துடித்தது! —————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

29 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

எங்கேனும் ஒரு பக்கத்தில் புரட்டிப் பார் உன்னிடம் சொல்லவேண்டிய ஒன்றை எழுதியிருக்கிறேன் என்றென் புத்தகம் முழுதும் புரட்டிவிட்டு ஏமாற்றத்துடன் இல்லையே’ என்றாய். உனக்குள் ஏதோ இருப்பது எனக்கு இந்த கணத்தில் உறுதியானது! ——————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

28 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

பள்ளி வாசலில் விற்கும் நெல்லிக்காய் என்றால் உனக்கென்ன அவ்வளவு விருப்பமா’ என்றேன். இல்லையே அப்படியெல்லாம் இல்லையே’ என்றாய். அடிக்கடி வருகிறாயே வெளியே’ என்றேன். நான் நெல்லிக்காய் வாங்கி போய் சாப்பிட்டதே இல்லை’ என்றாய். அப்படியா.. பிறகு ஏன் ஒருநாளைக்கு அத்தனை முறை வந்து போகிறாய்’ என்றேன் நெல்லிக்காய் விற்கும் கிழவி மீது காஆஅ….தல் என்றாய்’ கோபமாக … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | பின்னூட்டமொன்றை இடுக

27 சொப்பு தூளியில்; நம் பேரெழுதுவோம் வா..

நம்மூர் கோவிலில் நீயும் நானும் ஒன்றாக சாமி சுத்தி வந்த நாட்களில்; நான் பார்க்காத நேரத்தில் நீயும் – நீ பார்க்காத நேரத்தில் நானும் பார்த்துக்கொண்டது சாமிக்கு மட்டுமே தெரியும்!! ————————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்