Category Archives: வாழ்த்துக்கள்!

இதயத்தில் இடம் கொண்டும் கொடுத்தும் போனவர்களுக்கு எழுதிய வாழ்த்து பாக்கள்!

அன்பு தங்கைக்கொரு பாட்டு..

அம்மா அம்மா எனும் ஓசையை அண்ணா அண்ணா என்றழைப்பவளே.. எனை சுற்றி சுற்றி வளையவர அன்பின் – சாமி போல பிறந்தவளே.. மனசெல்லாம் பரவி குழந்தை போல வளர்ந்தவளே.. வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் ஆனவளே.. ஏனழுதேனென்று கேட்காமலெ எனக்காக அழுபவளே.. நான் பேசாத மௌனத்தில் அழுகையாய் கரைபவளே.. கட்டளையிடும் முன்னாலே செய்கையாய் சிரிப்பவளே.. சிரித்து சிரித்தே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு

சந்த கவியின் குரலை சிங்க குரலில் வென்றவனே; சின்ன பிள்ளை சிரிப்பில் நெஞ்சம் கொள்ளை கொண்டவனே; கொட்டும் மழை போல இடி முட்டும் மேடைக் கொம்பனே; படை கட்டி எவர் வரினும் சற்றும் சலிக்கா வம்பனே; சங்க கவி போல மாதவி சொந்தம் கொள்ளும் மன்னனே; பெற்றோர் உற்றாரெல்லாம் மகிழ உயர்வாய் வாழ்ந்துக் காட்டு இன்பனே; … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

தம்பி ஆனந்திற்கும் சகோதரி உமாவிற்கும் – திருமண வாழ்த்து!

ஒரு தெருக்கோடி முனையில் நின்று – திரும்பிப் பார்குமந்த பார்வைக்காய்.., இமைக்குள் இருவரும் ஒளிந்து ஒருவரை தேடுமந்த இனிய விளையாட்டிற்காய்.., இரவு பகல் கடந்து சூரிய..சந்திரன் கடந்து கடக்க இயலா – ஒரு நிமிடக் காத்திருப்பிற்காய்.., நினைவுகளில் உலகம் விட்டெங்கோ சென்று ஒருவருக்காக மட்டும் வாழுமந்த அன்பின் தருணத்திற்காய்.., பாதி தின்கையில் மீதியை வைத்துவிட்டு எழுந்திருக்கும் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

திருமணப் பெண்ணுக்கு ஒரு மணமகனின் கவிதை!

என் வாழ்வின் உயிர்மூச்சிற்கு, என் காத்திருப்பில் பூத்த பரிமளமே! என் கனவுகளை சுமக்க உறவுற்ற உயிரே! நான் வாழாத நாட்களில் தேடிய தேடலின் அர்த்தமே! இனி என் மீத நாட்களின் சிரிப்பிற்கு சொந்தமனவளே! வா….! சந்தமுள்ள காதலியே… சலங்கை குலுங்கிய தமிழ் பேச்சழகே! வா…! இதோ-என் வாழ்வின் புதுமைகள் – நீ கால் பதித்த இடத்திலிருந்து … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | 4 பின்னூட்டங்கள்

என் உடன் பிறந்தானுக்கு திருமண வாழ்த்து!

மணமகன் : கோ.விஸ்வநாதன் மணமகள் : கு.புனிதா நாள்: 04.02.2010 திருமண வாழ்த்து! பூப்போல பூப்போல மனசிருக்கு உனக்கு வாழ்வெல்லாம் இனிப்பான வளமிருக்கு; தருசான நிலம் போல நீயிருக்க – உன்னை உழுது எடுத்து உலகமளக்க வாழ்விருக்கு! கடுகு மணி ரகசியம் தான் கத்திருக்க முயற்சிக்கு மறு அர்த்தம் தெரிஞ்சிருக்க; ஊருலகம் சேர்ந்து இப்போ வாழ்த்துதடா … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | 6 பின்னூட்டங்கள்