33, ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது!!

றந்த போராளிகளின்
உடல்கள் நைந்துக்கிடப்பதுக் கண்டு
நெஞ்சு பிளந்தது,

அருகே நின்று பார்த்தவன் சொன்னான்
அதலாம் பிணங்களென்று;

இல்லை.
பிணங்கள் இல்லை அவர்கள்;

உயிர் விட்டெரியும் எம்
விடுதலை தீபங்கள்,

நாளைய எங்கள் வாழ்வின்
ஒளியாய் வீசி – உயிர்த்திருக்க காத்திருக்கும்
தியாக விளக்குகள் என்றேன்; உணர்ச்சிவசப் பட்டு

அவன் இவ்வுலக மனிதரைப் போலவே
சிரித்துக் கொண்டே போனான் –
எனக்குள்ளிருந்த விடுதலையின் தீ
சுடர்விட்டு எரிந்தது அந்த சிரிப்பில்;

எரிந்து அனல் பரப்பியது……………

அதன் அனலில் தகித்து –
சுதந்திர விளக்குகள் ஒன்றாய் இரண்டாய்
மூன்றாய் சேர்ந்து – ஒவ்வொன்றாய் கூடி
மிக ஒய்யாரமாய் ஒட்டுமொத்தமும் எரியத் துவங்கின;

பரவிய வெளிச்சத்தில் புரிந்தது – நம் வேகத்தை
எதிராளிதான் வைத்திருக்கிறான் என்று;

இதோ, இன்று விடுதலைக்கான வெற்றிநெருப்பு
என் கண்களில் மட்டுமல்ல –
எல்லோரின் கண்களிலும் மிக நன்றாகவே சுடர்விட்டெரிகிறது!!
————————————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“கற்பனை மட்டுமல்ல கவிதை” இது ஒரு கவியரங்கக் கவிதை!!

சொல்லும் பொருளும் அரசாலும்
எம் சந்தக் கவியும் ஜதிபாடும்,

உள்ளும் புறமும் அழகாகும்
தமிழ் எங்கும் எதிலும் முதலாகும்,

மொழியும் உயிரும் ஒன்றாகும்
அதிலும் தமிழே சிறப்பாகும்..,

கம்ப நாத கவிமலரே..
கடல் காற்று வானமென கலந்த தமிழழகே;

என் உச்சுமுதல் நிறைந்தவளே
நாவில் இனிக்கும் தமிழே முதல் வணக்கம்!

பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும்
தோழமை பூத்திருக்கும் கவிச் சபைக்கும்
சொடுக்கும் சொடுக்கலில் வடுக்களை கவிதையாக்கும் நாயகர்
யுகக் கவிக்கும் என் தலைவணக்கம்!
————————————————————————–

ணர்வுகளை பாடலாய் இசைத்து, நம் நாடிகளை ஒருநொடி அசைத்து
நமக்கு பெருமை சேர்க்க வந்திருக்கும்
பல்கலை திறன் படைத்த ‘திரையிசை தென்றல்’
இசையமைப்பாளர் திரு. ஆதி அவர்களுக்கும்,

தின்மூன்று வயதிலிருந்து – தன் – கிராம இசையை நகரம் வரை நகர்த்தி
ஒரேயொரு திரைப் பாடலில் உலகை சற்று திரும்பிப் பார்க்கவைத்த

அன்பு சகோதரி திருமதி சின்னப் பொண்ணு அவர்களுக்கும் என் நல்-வணக்கம்!
————————————————————————–

பொதுவாக கவிதைக்கு பொய்யழகு என்பார்கள், இங்கே; கவிதைக்கு மெய்யுமழகு என்று மெய்ப்பித்துக் கொண்டிருக்கும் என் சக கவிஞர்களுக்கு நன்றிகளை கூறி என் கவிதைக்குள் வருகிறேன்..
————————————————————————–

தலைப்பு : கற்பனை மட்டுமல்ல கவிதை!

கவியரங்கத்தில் பேசிய போது எடுத்தது.. (19.11.2010)

ன் தெருவெல்லாம் பூத்த காதல் பாடி
என் வாழ்வெல்லாம் அழுத கண்ணீர் சொட்டி
எம் இனத்தின் உயிர்பூ தமிழை சூடி
என் உறவுகளுக்கு நான் சேர்க்கும் பொக்கிஷம்; கவிதை!

யிரெல்லாம் ரத்தம் சிந்தி
உறவெல்லாம் அறுத்துப் போட்டும்
மனசெல்லாம் காய்ந்துப் போய் திரியும் மனிதர்களின்
முகமூடி கிழித்து உலகிற்குக் காட்டியது; கவிதை!

காலம் தொலைக்காத காதலால் – ஒழியும்
ஜாதிமதங்களின் கொடூரம் பேசி,
கையளவுமனசில் உலக அவலம் சுமக்கும் வாழ்க்கையை
கதைகதையாய் – கோர்த்துக் கொண்டது; கவிதை!

காற்றில் இரண்டு சலங்கைக் குலுங்க
காதுகளில் உயிர்தொடும் அவள் குரல் கேட்க
அவளை எண்ணி உருகி இரவெலாம் சுமந்த கனவுகளை
பகலெல்லாம் எழுதித்  தீர்த்த இனிய காதல்; கவிதை!

சில்லறை கொட்டும் சப்தத்தில்
சிந்தும் கண்ணீரின் விசும்பலில்
கொட்டும் மழையின் தாளத்தில்
காடுகனக்க சூழும் மேகநகர்தலில்
சில்லென்று கண்ணிமை நனைக்கும் காற்றினில்
இதயம் நிறைக்கிறது; கவிதை!

கைநீட்டி வாங்கிய லஞ்சத்தை
வழிமடக்கி அடிக்கும் கொள்ளையை
ஓட்டு விற்று வாங்கிய வெற்றியை
வட்டிக்கு கொடுத்து அறுக்கும் தாலியை
ஒரு சாமானியருக்கும் புரிய சாட்டைச் சொடுக்கியது; கவிதை!

றவெல்லாம் பிரிந்து
மனைவி குழந்தைகளைப் பிரிந்துப் – ஊர்விட்டு
தேசம் கடந்து – அரபி அழைத்த ஒமாருக்கெல்லாம் ஆமாம் போட்டு
குவைத்தில் குப்பூசுத் தின்னக் கூட நேரமின்றி உழைக்கும் –
என் உறவுகளின் தவிப்பை; வெளிச்சம் போட்டு ஊருக்கு காட்டியது; கவிதை!

ண்வாசம் மறக்காத
இரவெல்லாம் தலையணை நனைய அழுது
பகலெல்லாம் பைப்பிலும் பாலைவனத்திலும்
மணற்காற்றோடு காற்றாக திரிந்து

கடிதம் போய் தொலைபேசி போய் மின்னஞ்சல் போய்
ஸ்கைப்பிலும் யாகூவிலும் கூகுல்டாக்கிலும் வருடங்களை தொலைத்து
தன் வாழ்க்கையை கூட திரைப்படங்களில் ரசித்து
வயோதிகம் வாட்டும் நாளில் ஊருக்கு போ’ என்றனுப்பினால்

அதன் – அத்தனை வலிகளையும் கண்ணீராய் சுமந்தவனின்
தீர்ந்து போன வாழ்க்கை; கவிதை!

காதோடு காது பேசி
திருமணமான முதல் மாத நாட்களை
‘வாழ்வெல்லாம் நினைத்துருகி –

விமானம் வரும் திசைபார்ப்பதை தினசரி கடமையில் ஒன்றாக்கி
இன்று வருவார் நாளை வருவாரெனக் காத்திருந்து

வங்கி தோரும்  நடையாய் நடைநடந்து /
கரண்ட் பில் கட்டி / மளிகை வாங்கிபோட்டு /
மகன்- மகள் திருமணத்தை நடத்தி / பேர-பேத்தியை படிக்கவைத்து /
நானிருந்து செய்வதை எல்லாம் நானின்றி செய்து –
நரைத்த முடியில் அவளுக்கான ஆசைகளை மிச்சம் வைத்திருக்கும்
என் மனைவியின் ஏக்கத்தை எழுத்தாக்கிக் கொண்டது; கவிதை!

தம் பிரச்சனையா? ஜாதி பிரச்சனையா?
மூடப் பழக்கம் எதிர்ப்பா?, பகுத்தறிவு பேச்சா ?
ஆன்மீக சொற்பொழிவு வேண்டுமா?, கடவுகளை தேடுகிறாயா ?
கைம்பெண் மறுவாழ்வு பற்றி விழிப்புணர்வா?
திருநங்கையின் வலி தெரிய வேண்டுமா?
தேடிப் பார் எம் கவிதையில் கிடைக்கும்!

சிட்டாடப் பட்டுடுத்தி சீரெல்லாம் சேர்த்து வைத்து
மொட்டாட்டோம் அனுப்பினோமே,
கேஸ் வெடித்ததாமே; எம் குலவிளக்கு அணைந்து போச்சே!!!!!!!
உன் தாய் கதறினாளா – தேடிப் பார் எம் கவிதையில்
என் கவிஞன் வரதட்சணைக் கொடுமையில் எழுதியிருப்பான்!

விதை வெறும் நாலடியில் பாடி
ஆறடியில் மாலை வாங்க அல்ல;

விதை வெறும் நாலடியில் பாடி
ஆறடியில் மாலை வாங்க அல்ல
வெறும் கற்பனை அல்ல – கவிதை

விதையில் ஒரு ஜீவன் பூக்கிறது
கவிதையில் ஒரு வாழ்வு மலர்கிறது
கவிதையில் ஒரு புரட்சி வெடிக்கிறது –
இச்சமுதாயத்தைப் புரட்டிப் போடுகிறது கவிதை!

பாரதி கவிதை எழுதினார்
பாப்பா பாட்டு குயில் பாட்டுவரை கவிதையானது,
வைரமுத்து கவிதை எழுதினார்
பட்டிதொட்டி யெல்லாம் கவிதையின் வாசம் பரவியது,

நம் யுகபாரதி கவிதை எழுதினார்
தெருவாசிகளின் வலி கூட தெருவாசகம் ஆனது,
ஐயா சேது கவிதை எழுதினார் –
வளைகுடா வானம்பாடி கவிஞர்சங்கம் – பிறந்தது,
வானருவி முதியோர் இல்லம்; திறம்பட திறந்தது!

விதை; அவரவருக்கான வாழ்க்கையை அவரவருக்குத் தருகிறது
கவிதை; படிப்பவரின் வாசிப்பிற்கான ஞானத்தை கேட்போருக்கும் தருகிறது
கவிதை; உன்னையும் என்னையும் இக்குளிரில் கூட கூட்டி
இங்கே ஒன்று சேர்த்திருக்கிறது.

னவே –  வெறும் கற்பனை மட்டுமல்ல கவிதை’ என்று கூறி
விடைபெறுகிறேன்! நன்றி வணக்கம்!!
—————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)

க்க காட்சிகள் அமைத்து, உறவுகளின் ஒற்றுமை குறித்து  உலகெங்கிலும்  தேவையான விழிப்பினை ஏற்படுத்த என் எழுதுகோலையும் மதித்து;  என் உழைப்பை படைப்பாக்கி உலகவளம் வரச்செய்த GTV-க்கும், குறிப்பாக  அன்பிற்கினிய சகோதரி றேனுகா அவர்களுக்கும், கேட்டவுடன் இசையமைத்து, உணர்வுப் பொங்க பாடியும் தந்த இசையமைப்பாளர் ‘திரையிசை  தென்றல் திரு. ஆதி அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும்  தெரிவிப்போம்..

வித்யாசாகர்

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

32 மானத்தி அவள்; தமிழச்சி!!

 

செய்தித் தொகுப்பாளர் இசை ப்ரியா!

1
ண்ணின்
விடுதலைக்குப் போராடிய
தமிழச்சியின் நிர்வாணம்
இணையமெங்கும் ஒளிபரப்பு;

உயிரிருந்தும் உலவும் நாம் –
அதை கண்டும் –
சாகாத; இழி பிறப்பு!!
————————————————————–

2
மானத்தில் –
தொட்டால் சுடும் நெருப்பு,
இழிவாய் –
பார்த்தாலே பாயும் மின்சாரம்,
அவள் –
தாயிற்கும் ஒரு படி மேல் என்று
இனி புரியும் – சிங்களனுக்கு!!
————————————————————–

3
வளுக்கு மட்டும் தெரிந்திருந்தால்
ஒன்று பார்த்தவரையெல்லாம்
எரித்திருப்பாள்,

அல்லது – தன்னையாவது
எரித்துக் கொண்டிருப்பாள்!!
————————————————————–

4
ப்பித் தவறி
அவள் பிள்ளை இதை
பார்த்திருந்தால்-
எத்தனை ராஜபக்ஷேவை அவன்
கொன்றிருப்பானோ!!!!!!!?
————————————————————–

5
ம் மண்ணின்; வீரமென்
தமிழச்சிகள்,

நாய்கள் கொன்றுவிட்டு தான்
கொந்தியிருக்கின்றன!!
————————————————————–

6
ஜென்மம்
எத்தனை எடுத்தாலும் இனி

ரத்தத்தின் ஒரு துளியிலாவது
இருக்கும் –
அவன் மீதான; அவளின் கோபம்!
————————————————————–

7
யாரும் சாட்சிக்கு வேண்டாம்

காற்றும்.. வெளிச்சமும்..
மண்ணும்.. வானும்..
மரமும் செடிகளும் –
பார்த்துக் கொண்டு தானிருந்தன

அந்தக் கயவர்களை!!
————————————————————–

8
டல் தகதகவெனக்
கொதித்து –
உலகத்தை சூழ்ந்து அழித்திருக்கும்;

அந்த கொடுமைக்கு உடனே
தண்டனை கொடுப்பதெனில்!!
————————————————————–

9
யாரோ ஒருவனுக்கு
துணிவிருந்தால்
அவள் கையில் ஒரு அரிவாளை
கொடுத்துவிட்டு சொல் –
உன்னை இப்படிச் செய்வேனென்று;

அந்த அரிவாளில் –

உன்னைப் போல் – அவள்
நூறு பேரை அறுத்திருப்பாள்!!
————————————————————–

10
னக்கு
மரணத்தை இபொழுதேக் கொடு;

அதற்கு ஈடாக –

இணையத்தில் தெரிந்த
என் தமிழச்சியின் வெற்றுடம்பை
ஈழ விடுதலையால் போற்று,

இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்!!
————————————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

அமோகமாக நடந்தேறியது ‘குவைத் கவிஞர் சங்கத்தின் தேனிசை திருவிழா..

வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம், குவைத்.

குவைத் விமான விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்த போது.. (அம்மாவும் மனைவியும் மகனும் கூட என் பயணத்தில்..)

கிராமிய பாடகி திருமதி சின்னப்பொண்ணு குத்துவிளக்கேற்ற, இந்திய தூதர் மேதகு. அஜய் மல்கோத்ரா கைதட்டி ஆரவார படுத்திய போது..

சிறப்பு விருந்தினர்களை சிறப்பு செய்யயிருக்கும் தருணம்..

நிகழ்த்துக் கலை மூலம் தன் சமூக சிந்தனைகளை பாடல்களாக பாடுகிறார் இசையமைப்பாளர் திரு ஆதி, இடையே கவிஞர்கள் நிலவனும், விருதை பாரியும் அவரின் பாடல்களுக்கு பெருமை சேர்க்கின்றனர்..

கிராமத்து பாடலை நகரத்திற்குக் கொண்டுவரும் சிறப்புப் படகி திருமதி. சின்னப்பொன்னுடன் சங்கமம் குழுவினரின் நடனுமும்..

சிறப்புக் கவிஞர் திரு. யுகபாரதியின் தலைமையில் 'கற்பனை மட்டுமல்ல கவிதை' எனும் தலைப்பில் ஆறு பேர் கவிதை பாடிய கவியரங்கத்தில் வித்யாசாகரும்...

அலைகடலென திரண்ட ரசிகர்களின் ரசனை சொட்டிய 'ஒரு பக்க காட்சி..'

எனை கண்டதும் நட்பு எனை பார்த்தது; சிரித்துக் கொண்டே கிளிக்கினேன், நட்பு கவிதையாய் சிரித்துக் கொண்டது..

திரு. மகேந்திரன் சேது, திருமதி. செம்பொன் மாரி கா. சேது, திருமதி.சின்னப்பொண்ணு, வித்யாசாகர், மழலை.முகில்வண்ணன் வித்யாசாகர், திரு. யுகபாரதி, ஐயா திரு. செம்பொன் மேரி கா. சேது, திரு. திரையிசை தென்றல் ஆதி

விழா நிறைவு மனதில் நிறைய; அதில் சில இதுபோன்ற புகைப்படங்களாகவும் பதிவானது..

மிழ்மொழி அக்கறை, தமிழர் ஆரோக்கியம், தமிழினத்தின் வளர்ச்சி சார்ந்த வாழ்வியல் மாற்றங்கள் என பங்காற்ற வேண்டிய இடங்களிலெல்லாம் மௌனித்து, முழு ஈடுபாடு காட்ட திராணியின்றி அவைகளை வார்த்தையால் மென்று, தனை வளர்த்துக் கொண்டிருக்கும் பலருக்கு மத்தியில்; தெருக்கள் பல சுற்றி தமிழர்களை திரட்டி, வசதியான வீடுகளை தட்டி, அவர்களின் உள்ளத்தின் ஈரத்திலிருந்து விழாக்களின் மூலாதாரத்தை பெற்று, நட்புசார் பற்றாளர்களின் பலத்தினால் எழுந்துநின்று, துணிந்து விழாக்களை எடுக்கிறது; உலக வயல்களில் தமிழை தமிழர் சிறப்பினை பரப்பத் தவிக்கும் ‘குவைத்தின் கவிஞர் சங்கங்களும் இதர பிற தமிழ் மன்றங்களும்.

அவ்வழியில், தன் உழைப்பின் மூலதனமாக பெரிய ஒரு விழாவின் வெற்றியை குவைத்தில் கண்டிருக்கிறது வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம்.

ஐயா திரு செம்பொன் மாரி கா.சேது அவர்களின் தலைமையில், பொறுப்பாளர்களின் உழைப்பில், தோழமை உறவுகளின் பங்களிப்பில் கிடைத்த மகத்தான வெற்றியிது என்பதை; மணி பதினொன்று வரை அமர்ந்திருந்த அரங்கம் நிறைந்த கூட்டம் உற்சாகத்தோடு கைதட்டி நிரூபித்தது.

தாளா குளிரிலும், கருக்கும் வெய்யிலிலும், வீசும் மண் காற்றிலும் தனை வருத்தி, உறவுகளை ஊரில் விட்டுவிட்டு குடும்பத்தின் தீபமாக இங்கே தனித்து நின்று எரியும் உழைப்பின் சுடர்களின் முகத்தில் சந்தோச வெளிச்சமாய் பரவ ‘குத்துவிளக்கேற்றி ‘பரதமாடி ‘பாட்டுபாடி ‘கவி படித்து ‘ஆட்டம் போட்டு ஒரு புது உலக குதூகலமாய் கடந்துபோனது இந்த ஐந்தரை மணிநேர தேனிசை திருவிழா.

நவம்பர் 19 வெள்ளியன்று மாலை 5.30 மணிக்கு குவைத்தின் இந்திய தூதர் மேதகு ஐயா திரு.அஜய் மல்கோத்ரா அவர்களின் முன்னிலையில் பிரபல கிராமிய பாடகி திருமதி சின்னப்பொன்னு அவர்கள் குத்துவிளக்கேற்ற, உடன் பிரபல பாடலாசிரியர் திரு. யுகபாரதி மற்றும் சிறந்த நிகழ்த்துக் கலைஞரும் இசையமைப்பாளருமான ‘திரையிசை தென்றல் திரு. ஆதி அவர்களும் கைதட்டி ஆரவாரப் படுத்த விழா இனிதே துவங்கியது.

அடுத்து அரங்கம் நிறைந்த இனிய குரலாக தமிழ் தாய் வாழ்த்து பாடி முடிய, இளந்தேவதை செல்வி.மானசா மலர்வண்ணன் தன் பரத நாட்டியத்தால் வந்திருந்தவர் பார்வையிலெல்லாம் நம் தமிழர் வாழ்ந்த அழகை நினைவு படுத்தி ‘ஜோ..வென பெய்த மழைபோல் கொட்டிய கைத் தட்டல்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தார்.

அதை தொடர்ந்து சங்கமம் குழுவினரின் ஆடல் பாடல்களும், பாடகர்கள் ராமகிருஷ்ணன், கணேசன், முருகானந்தம், கங்கேஸ்வரன், ராணிமோகன், ஜெயசீலன், மகேந்திரன், பாஸ்டின், ராதிகாசெல்வம், சண்முகம் போன்றவர்கள் பாடிய பல திரைப்படப் பாடல்களும்; இசையமைப்பாளர் திரு. ஆதி அவர்கள் பாடிய சமூகப் பாடல்களும், கிராமிய பாடகி திருமதி.சின்னப் பொன்னு பாடிய ‘மகள் எழுதும் கடிதம் போன்ற பாடல்களும், கூட்டத்தை, அரங்கத்தை விட்டு வெளியேறாமல் அமரவைத்ததை, விழாவிற்கு வந்தவர் நிச்சயம் நினைவில் கொண்டிருப்பர்.

பொதுவாக அரபுதேசத்தை பொருத்தவரை, வாரத்தில் ஒருநாள் கிடைக்கும் விடுமுறை வெள்ளிக் கிழமை விடுமுறை. தன்னை அடுத்தவாரத்திற்கு தயார்படுத்திக் கொள்ள உதவும் ஒற்றை நாளிது. இதில் ‘சொந்தக்காரர் ஒருவர் பக்கத்து ஊரில் வேலைக்கு வந்திருக்கிறார் என்றாலே, சென்றுப் பார்க்க சோம்பலுறும் மனநிலை தான் ‘வியர்வையில் நனைந்த அந்த உழைப்பாளி வர்கங்களுக்குரியது. அவர்களை அழைத்து கவியரங்கம் நடத்துகிறோம் என்று சொன்னால் கிண்டலாய் சிரிக்கத் தான் செய்வார்கள். ஆனால் –

ஆறுபேர் கவிதை படித்து நடுவர் யுகபாரதி தலைமையுரை வாசிக்கும்வரை அரங்கத்தின் அத்தனைபேரும் கவிதைகளில் கட்டுண்டு கிடந்ததனர் என்றால், கைதட்டி கவிதைகளை ஏற்று ஆரவாரப் படுத்தியதென்றால், அது அந்த ஆறு கவிஞர்களுக்கும், கவியரங்கத் தலைமையேற்ற பாடலாசிரியர் யுகபாரதிக்கும் கிடைத்த மரியாதை மட்டுமின்றி, குவைத்வாழ் தமிழ் மக்கள் ‘அத்தனை தமிழ்ப் பற்றும், இனப்பற்றும், கவிதை ரசனையும் மனதில் பூரிக்க வாழ்ந்துக் கொண்டுள்ளனர் என்பதும் ஒரு பெரிய உண்மை.

‘கற்பனை மட்டுமல்ல கவிதை’ எனும் தலைப்பில் கவிஞர்கள் ராதிகா செல்வம், சலீகா சாகுல், முனு.சிவசங்கரன், நிலவன், வித்யாசாகர், விருதை பாரி என அவரவர் திறன் கொண்டு கேட்கும் காதுகளை வரிகளால் வருடினர். அதோடு, கவிதைக்கு பொய்யழகு எனும் ஒற்றை கூற்றையே அத்தனை பேரும் உடைத்தனர்.

உண்மையில் ‘கவிதைக்கு மெய்யுமழகு என்று மாற்றிக் காட்டிய பெருமை தமிழுலகில் ‘இந்த வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கத்துக் கவிஞர்களுக்கு(ம்)’ உரியது என்பதை, ‘இறுதியாக கவிஞர் திரு. யுகபாரதி பேசுகையில் அதும் கேட்க கேட்க ரசனையாக ஒவ்வொரு கவிஞர்களையும் வர்ணித்துப் பேசுகையில், தன் அனுபவங்களை எல்லாம் நம்பிக்கை நிறையும் வார்த்தைகளாக உதிர்கையில், அரங்கத்து ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஒவ்வொரு வரிக்கு வரிக்கான கரகோஷங்களும் ஆமென்று உறுதி படுத்தியது.

இடையே இந்திய தூதர் ஐயா மேதகு. அஜய் மல்கோத்ரா, கவிஞர் திரு. யுகபாரதி, இசையமைப்பாளர் திரு.ஆதி, கிராமிய இசை பாடகி திருமதி. சின்னப்பொன்னு மற்றும் இதர கலைஞர்கள் ,சிறப்பு விருந்தினர்களுக்கான நினைவு பேழையும், மலர்கொத்தும் வழங்கி கெளரவிக்கப் பட்டதுடன், அழகான விழா மலரும் வெளியிடப் பட்டது.

அடுத்ததாக, ஐயா திரு. ஆதி அவர்களின் தலைமையில் கவிஞர்கள் நிலவன் மற்றும் கவிஞர் விருதை பாரி சேர்ந்து நிகழ்த்துக் கலை போன்று பேசி நடிக்க ‘இசையமைப்பாளர் திரு.ஆதி முன்சென்று அவர்களின் பேச்சின் ஊடாக கலந்துப் பாடிய முற்போக்குப் பாடல்களும், காதல் பாடல்களும் கேட்போரின் நரம்பு புடைத்து, மயிர்க்கால்களை குத்திட்டு நிற்கவைத்தது. அத்தகு சிந்திக்கவைக்கும் அவரின் சமூக சீர்திருத்தப் பாடல்களை தொடர்ந்து, அன்பின் சகோதரி திருமதி. சின்னப்பொன்னு அவர்கள் மேடையேறி தன்னானே… தன்னானே… என்றது தான் தாமதம் அரங்கத்தில் விசில் பறக்க ஆரம்பமானது ஆட்டமும் பாட்டமும் கொண்டாட்டமும் இயல்பாகத் தொற்றிக் கொண்டன..

இறுதியில், ஓவியக் கலைஞர் திரு.கொண்டல்ராஜ் அவர்கள், விழாவை சிறப்பிக்க வந்த சிறப்பு விருந்தினர் மூவரையுமே பாடும் போதும் பேசும் போதும் அமர்ந்திருந்த போதுமென மாறி மாறி வரைந்துக் கொடுத்து, குவைத் மக்களின் கலையுணர்வை மேலும் சற்று மேன்மை படுத்தினார்.

விழாவின் முக்கிய மற்றொரு சிறப்பு யாதெனில், நிகழ்ச்சிகளை பகுதி பகுதியாக பிரித்து, காதிற்கினிய தனது மெல்லிய குரல்களால் கம்பீர வரிகளால் தொகுத்து வழங்கிய அற்புத மங்கையர்களான திருமதி பிரியா அம்பலவாணன், திருமதி பொன்னி ராமன், திருமதி ராணி மோகன், திருமதி. ஸ்டெல்லா ஆண்டனி, திருமதி. ராதிகா செல்வம் போன்றோரும் மற்றும் திரு.மகேந்திரன் சேது அவர்களும் ஆவர்.

இவையெல்லாம் ஒருபுறமெனில், சற்றும் முகம் சுழிக்காமல் வந்திருந்த ஆயிரம் பேர் வரையிலான ரசிக பெருமக்களுக்கு மத்தியில், சுவையான உணவகம் அமைத்து, ஓடி ஓடி தரமான தன் சேவையை செய்த புதிய ‘வீராஸ்’ உணவகத்தின் சிறப்பும் பெரிய பாராட்டுதலுக்குரியது.

ஒரு ஊரில் மழைபெய்து முடிந்தாலும், ஊரெல்லாம் அது பெய்ததின் வாசத்தை தான் வந்துபோனதன் அடையாளமாக காற்றெல்லாம் நிறைத்து வைத்திருக்கும் மழைபோல; விழா முடிவின் மனநிறைவாக எல்லோரும் சிறப்பு விருந்தினர்களோடு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மெல்ல பிரிந்து விடைபெறலாயினர். மறுநாள் விடியலில் எழுந்து வேலைக்கு போக வேண்டிய உழைப்பாளர் கூட்டம் தன் பாரத்தை சற்று சிரிப்பில் சுமந்துக் கொண்டே ஓடி வண்டி பிடிக்கத் துவங்கியது.

கடைசியில், ஒரு வீடுகட்டி புதுமனை புகுவிழா நடத்தியது போல், ஒரு திருமணத்தை சிறப்புற முடித்துவிட்டு மதியவேளையில் பாத்திரபண்டங்களை சுமந்து செல்லும் திருமண வீட்டாரை போல்; விழாவின் மகிழ்வையும் வெற்றியையும் சுமந்துகொண்டு ‘வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கத்தினர் புறப்பட, விழாவின் வெற்றிக்கான அலுப்பு மெல்ல அவர்களை வந்து தொற்றிக் கொண்டிருந்தது. யாருமில்லா அமைதியொன்று ‘அந்த அரங்கத்தின் விளக்கணைத்த உடன் அறைமுழுதும் பரவியது.
——————————————————————————————–
வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்