9 உடைந்த கடவுள்!!

ட்டிக்கு
பணம் வாங்கி

வட்டிக்கு
பணம் வாங்கி

உடைகிறது சேமிக்கும்
மனப்பான்மை;

இல்லாமலே போகிறது
மனசாட்சி!!
——————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

8 உடைந்த கடவுள்!!

ங்கெங்கோ
யார் யாரோ
பேசிக் கொள்கிறார்கள் –
அவன் சரியில்லை
அது செய்தது
உலகமே அப்படித் தான் என்றெல்லாம்;

நான் இப்படித்தானென்று
ஒத்துக் கொள்ள –
யாருக்குமே துணிவில்லை!!
———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

7 உடைந்த கடவுள்!!

சுட்டெரிக்கும் சமுகத்தில்
சுயமாக –
எல்லோரும் சிந்திக்காதலில்
ஒவ்வொன்றாய் நிகழ்கிறது
கொலைகள்;

மதமென்றும்
ஜாதியென்றும்..

இனமென்றும்
பணமென்றும்..

உறவேண்டும்
காதலென்றும்..

கடவுளென்றும் கூட!!!
—————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6 உடைந்த கடவுள்!!

னிதன் செய்யும்
தவறுகளில் –
கடவுள் உதவிக்கழைக்கப் பட்டு
கடவுள் தோற்கடிக்கப் பட்டு
கடவுள் குறை சொல்லப் பட்டு
கடவுள் குற்றம் சாட்டப் பட்டு
கடவுள் மறுக்கப் பட்டு
கடவுள் சபிக்கப் பட்டு
கடவுள் உடைந்து தான் போனார்.

மனிதன்
உடைக்கவில்லை என்கிறான்;

கடவுள் மனிதனை
‘உடைத்ததாக சொல்வதேயில்லை.

கடவுள்
கடவுளாகவே இருக்கிறார்!!
——————————————

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எழுச்சிக் கவிதாயினி சரளாவின் கவிதைகள்..

ன்னால் சந்தோசத்தை
பகிரமுடிவதில்லை.

முழுதாய் உணரவும்
துய்க்கவும் முடிவதில்லை.

கண் மூடினால்
கற்பு களவாட படும் –
கண் திறந்தால்
கற்பு அழிக்கப்படும் என
கங்கணம் கட்டிகொண்டிருக்கும்
கள்வர்களுக்கு மத்தியில் –
காற்றில் கரைந்து விட
துடித்து கொண்டிருக்கும் என்
சகோதரியின் அவலத்தை நினைக்கையில் –

எப்படி என்னால் இன்பத்தை
துய்க்க முடியும்???

துக்கத்தின் அடக்க முடியா
வெளிப்பாடினை –
விழிநீர் உடைப்பெடுத்து
வெளிபடுவதை கூட ஊரார்
ஆனந்த கண்ணீரென –
அடையாள படுத்துகின்றனர்;

உணர்வுகளை
வேரோடு பிடுங்கி எரிந்தபின்
வெறும் வெற்றுடம்பாய்
இதயம் இருந்த இடத்தில
இயந்திரத்தை பொருத்திக்கொண்டு
கட்டளைகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறேன்!!
————————————————————————

ப்போது உன்
மானம் அழிக்கப்பட்டு அந்த
மண்ணில் விழுந்து
மாண்டயோ;
அபோதே பறிபோனது
உன்னோடுஎன் உயிரும் …
————————————————————————

த்தனை போர்க்களம்
வந்தாலும்
ஆணுக்கு மட்டுமே
அது பொற்காலம்;

பெண்ணுக்கு –
போதாத காலம் தான்!
————————————————————————

நீங்கள் வீழ்த்தியதாக
நினைத்து மார்தட்டிக் கொள்வது
எங்களின் குல கொழுந்தை;

உங்களின் சந்ததிகளை
வளர்க்கும்   வளமான மண்ணை;

உங்கள் விதைகளை மட்டும்
வைத்து ஒரு போதும்
விருச்சத்தை உருவாக்க முடியாது.

இந்த உண்மை புரியும் போது –
கழுகுகளின் கடைசி உணவாய் நீ இருப்பாய்!!
————————————————————————
எழுச்சிக் கவிதாயினி ‘சரளா’
கோவை.

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged | 26 பின்னூட்டங்கள்