வாழும்போதே யோசிக்கலாம் வாங்க..

ரு தலைகீழ் நடனம் போலத்
தான் வாழ்க்கை,
எங்கோ எதையோ சுற்றித்
எல்லாம் தெரிந்து கொள்வதற்குள்
வீடெல்லாம் மரண வாடை!

மரணம் விட்டொழியா
வாழ்வென்றில்லை –
மீண்டும் பிறக்கும் பிறப்போ
உறுதியென்றில்லை –
எவர் வந்து சொல்லியோ, கேட்டோ
ஜாதி கற்று; மதம் கற்று;
இனம் பெற்று – மனிதன்
மனிதனாக மட்டுமில்லை!

அடுத்தவனை அடித்தால்
அவன் வீழ்ந்தால்
அவனிடமிருப்பதை பெற்றால்
அது வெற்றியென்ற கோட்பாட்டிற்கு
யார் காரணமோ???

தன் நிறைவுகளில்
நிறைந்து போகும் அவலம் தாண்டி
பிறர் நிம்மதி கெடுக்கத் துணியும்
காலம் மாற –
இன்னும் எத்தனை ஜென்மம்
பிடிக்குமோ???

அடிமனதின் சுயநலம்
அறுக்கவும்,
பிறர் நலம் கருதி
எல்லோரும் வாழவும்
மனிதனை – யார் வந்து
மாற்றுவரோ???

பொய்யின்றி மனதில் தூய
எண்ணம் கொள்ளவும்,
மன அமைதியின்றி திரியும்
இவ்வாழ்க்கைக்கு – ஒரு
தீர்வான நிம்மதியை தரவும்
மரணம் தவிர்த்து –
வேறென்ன விடை கிடைத்துவிடுமோ???

வந்தவர் போனவர்
விட்டுச் சென்ற அடையாளத்தில் –
வாழ்பவர்
சரிசமமாக வாழும்
பாடமில்லாது போனது
எவர் குற்றமோ???

மனிதனுக்கான அதிக கூறுகள்
மனிதனை –
மனிதனாகவே வாழ்விக்கவில்லையே????????
என்ற மவுனத்தின் கேள்வியில்
எங்கிருந்தோ கேட்கிறது
காலத்தின் மிக வேகமான
பதிலொன்று –
‘வாழ்ந்தென்ன ஆகும் – நீ
வீழ்ந்த செய்தியே மிச்சமாகும்!
———————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 5 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 24

த்து மாதமெனும்
நீண்டதொரு
சுமப்பின் எல்லையில்
நீ வந்தாய்,

உன்வருகைக்குப் பின்
ஏதும் –
அத்தனை சுமையில்லை
உன் அழுகையை தவிர!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 23

நீ
என்பதன் அர்த்தம்
உலகம்
வானம்
பூமி
கடல்
காற்று
தென்றல்
அருவி
மழை
மலர்வனம்
மெல்லிசை
பாடல்
கவிதை
புத்தகம்
வியப்பு
பலம்
அதிஷ்டம்
நிம்மதி
ஏதுமில்லை –
குழந்தை என்பதொன்று
பெரிது!!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 22

முத்தம் கொடு என்றால்
உதட்டை கன்னத்தை பிடித்துக்
கடிக்கவோ –
எச்சிலொழுக பார்த்து
சிரிக்கவோ மட்டுமே
தெரியுமுனக்கு;

அதை தாண்டி
முத்தமென்றால் இப்படியென
சொல்லாமலேயே –
வரிசையில் நிற்கிறோம்
நானும் –
உன் அம்மாவும்
உன் எச்சிலில் நனைந்த
அந்த -முத்தத்தின் அன்பிற்காய்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 21

காலையிலெழுந்ததும்
கடவுளை பார்ப்பது
நல்லதென்பதில்
எத்தனை உண்மை உள்ளதோ;

உன்னை பார்ப்பதில்
எத்தனை எத்தனை
பரவசமுள்ளதடா…

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக