பிரிவுக்குப் பின் – 59

நானிங்கு
சம்பாதிக்கும்
பணம் –

இரக்கமின்றி தின்கிறது
நம் –
சந்தோசங்களையும்
சிரிப்பையும்;

இருந்தும் –
உலகிற்கு நாம்
நலமென்றே தெரிகிறது!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 58

ங்கு நான்
கடக்கும் –
ஒவ்வொரு கணமும்

நீயில்லாத சொர்கத்தை
இழக்கும் –
ஒவ்வொரு –
துளிகள் என்பதை
யாரறிவார்!!

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 57

யோ கடிதம்
அனுப்பக் கூட கையில்
பணமில்லையே – என நீ
அழுத அழையில்,

கடிதமில்லாமலே
புரிந்துவிட்டது – நீ

எழுதித் தீர்த்திடாத உன்
அத்தனை பாரங்களும்!

Posted in பட்டிமன்றம் | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 56

ரு சில
பொய்களில் ஜெயிக்கிறது
சிலரின் –
உண்மையற்ற வாழ்க்கை;

நானென் உண்மையை
உன் பொய்யற்ற அன்பில்
வெல்ல நினைக்கையில் –

உனக்கும் எனக்குமிடையே
குவைத்தும்
இந்தியாவுமாய்
எத்தனை பெரிய தூரம்!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 55

றங்குவதற்கு
விளக்கை அணைக்கும்
ஒவ்வொரு இரவிலும் –

விழித்துக் கொண்டு அலறுகின்ற
உன் –
அத்தனை நினைவுகளால்
உறங்காமலே பூக்கின்றன
கனவு பூக்கள் –

படுக்கையை நனைத்த
கண்ணீரின் ஈரத்தில்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்