28, பள்ளிக்கூட விடுமுறையும் பல்தேய்த்த காதலும்..

உன்னோடிருந்தால் பிரியும்1
ல்லோருக்கும் வேலை வேண்டும்
வீடு கட்டனும்
ஒய்யாரமா வாழணும்னு
நிறைய கனவுகளுண்டு

எனக்கு மட்டும்
எப்போதும்
கனவொன்று தான்

அதிலும்
நீ மட்டுமே இருப்பாய்

உன்னைப் பார்ப்பதற்காகவே
தூங்கிக் கொண்டிருப்பேன் நான்

நீயே என்னைக் கண்டாலும்
இப்போதெல்லாம்
பைத்தியமென்று தான்
சொல்லிப் போகிறாய்..

சொல் சொல்
ஒருநாள்
கனவுகள் நின்றுவிடும்

நீ தெருவில் வருவாய்
எல்லோரும் என்னை
அனாதை பிணமென்பார்கள்

உனக்கு மட்டும் உள்ளே
குறுகுறுக்கும்
பிறகு உனக்கும் கனவு வரும்
கண்ணீர் விட்டு நீயும் அழுவாய்
உன்னையும் சிலர் பைத்தியம் என்பார்கள்

நாளை உனக்கும்
கனவுகள் நிற்கலாம்
நீயும் அனாதைப் …லாம்

இப்படியான வேதனையைத் தான்
நம்மில் நிறையப்பேர்
காதலுக்கென வைத்திருக்கிறோம்..
———————————————————————-

2
ள்ளிவிடுமுறையில் தான்
நீ பார்க்க நீயாக இருப்பாய்

அந்த ரெட்டைப் பின்னல்
வெள்ளை ரிப்பன் இல்லை
முகமெல்லாம் சிரிப்பிருக்கும்

வெள்ளை ரவிக்கை
கரும்பச்சை தாவனியில்லை
கதவோரம் நின்று
ஒற்றைக் கொண்டையில் எட்டிப்பார்க்க
கிடைப்பாய்

மணி ஏழோ எட்டோ
கவலையில்லை
வாசலில்
பல் துளக்கியவாறே பேச துணிவாய்

போகும்போதும்
வரும்போதும் முறைக்கும்
அப்பா இல்லை
வீட்டிலிருந்தே மாற்றும் எப் எம் பாடலில்
மறைக்காது என் காதலைச்
சொல்வாய்..

வீட்டுப்பாடம்
என்று அமர்ந்துக்கொண்டு
புத்தகத்துள் என்
முகம் பார்த்து சிரிப்பாய்

எல்லாம்
அன்று நன்றாகத்தான் இருந்தது,

இன்று
ஏதுமில்லை
அந்த –
எப் எம் பாடல் கேட்டால்கூட வலி
படமொன்றுப் பார்க்கக்கூட
பயம்

உன்னை
நினைவுபடுத்தும்
எதையுமே நான் செய்வதில்லை
வாழ்க்கை
இப்படித்தான் போல்
நடக்கையில் இனிக்கும் நாட்களைப் போலல்லாது
பிரிவுக்குப்பின்
நினைவில்கூட உயிரைக் கொல்கிறது!!

அதனால் தான்
இதோ.. இங்குள்ளவர்களுக்கு தெரியும்
நானுன்னை –
நினைப்பதேயில்லை..
———————————————————————-
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு!!

உன்னோடிருந்தால் பிரியும்

முப்பதை கடந்தப்பின் தான்
வாழ்விற்கே வாசல் திறந்ததெனக்கு..

கனவுகளை
உடைத்து உடைத்துக்
கட்டிக்கொண்ட
கனமான தாலி எனது தாலி..

கன்னம் வலிந்தவள்
கொஞ்சமே வளர்ந்தவள்
கொசுறு கோபக்காரி
கொடுப்பினை அற்ற பாவி
முத்திய வயசாச்சு
முதிர்க்கண்ணி பேராச்சு என
எத்தனை எத்தனை ஊராரின் வர்ணனையில்
வறுபட்டு வறுபட்டு
குறைபட்ட பிறப்பென் பிறப்பு..

மிருகங்களின் நெருப்புப் பார்வையில்
கருகிப்போய்
ஒதுங்கி ஒதுங்கி
பயத்தின் கொடிய பள்ளத்தில் வீழ்ந்ததுண்டு

மிரண்டக் கண்கொண்டு
பார்த்து –
பாவி பெற்ற
வயிற்றை மட்டுமே நொந்ததுண்டு

மனதால்
கொந்திக் கொந்திப் போட்டு
பாதி ஈரப்புண்ணினால்
கருத்துபோனேன்,
களங்கத்தை
துடைக்க துணிந்து மிச்ச ஆசைகளையும்
அறுத்துக் கொண்டேன்;

புத்தாடையில் கண் குத்துமோ
பொலிவு முகத்தை காமம் கொல்லுமா
நிமிர்ந்து நடந்தால் நெஞ்சை கிள்ளுமோ
ஐயோ தலை குனிந்தால்
கோழை எண்ணுமோ என்று
இவ்வுலகைக் கண்டு அஞ்சி அஞ்சி
இத்தனை வருடத்தை
முட்களின்மீதே நடந்துத் தீர்த்தேன்..

அப்பா என்றாலும்
அண்ணா என்றாலும்
தம்பி என்றாலும்
தாத்தா என்றாலும் கூட
அழைத்தவரையெல்லாம் முழுதாக நம்பமுடியாமலே
முப்பது வருடத்தின் மீதேறி
இந்த ஒற்றை தாலி போதுமென
கெட்டியாய்
கட்டிக்கொண்டேன்..

கட்டியவன் யார்
கட்டியவனொரு செந்தாமரைப் போல்
அங்கொன்றுமாய்
இங்கொன்றுமாய்
வீடெரிக்கும் நெருப்பிற்கு மத்தியில்
வீட்டினுள் வெளிச்சமாய்ப் பூக்கும்
கண்ணிய தீயிலிருந்து வந்த ஒருவன்;

இதோ அவன் நடந்தால்
அன்பில் பூ விரிக்கிறான்
அசைந்தால் அழகை
ஓவியமென்கிறான்

குழல்கள் ஆகா
வாசனை என்கிறான்
இந்த குறைபிறப்பை
கோமேதகம்
தங்கம்
தேவதை என்கிறான்..

முத்திப் போனவளுக்கு
மனசெல்லாம் மகிழ்ச்சிப் பாட்டு
உடம்பெல்லாம்
வெட்கத்தின் வெளிச்சம்

நாட்களை தினமொரு ராகத்தில்
பாடிக் கொள்கிறோம்
இரவை
பகலை
இரண்டையும் சலிக்காது தின்றுத்
தீர்க்கிறோம்,

ஆசை
பெருநெருப்பு’ அறிவோம்
என்றாலும்

இது ஆசையில்லை
இத்தனை வருடத்து வலி,
மூடியிருந்த பாம்பின் இன்ப விசம்,
சொல்லி சொல்லிக் கொன்ற சமுதாயத்தின்
மீதேறி
பார் எங்களைப் பார்
இந்த முதிர்க் கன்னனையும்
கன்னியையும் பாரென்று சிரிக்கும்
ஆனந்த சிரிப்பு..
——————————————————–
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

22, விளக்கில்லை வெளிச்சமுண்டு..

111111111111111

மூங்கிலுக்குள்
காற்று புகுந்து
பாட்டு வந்ததைப் போல
எங்களுக்கும் காதல் வந்ததன்று..

கறுப்புக் கண்ணாடிக்குள்
பாடிய
இரண்டு
வெள்ளை இதயங்களின்
இனிப்புப் பாட்டு அது..

சிரிப்புச் சப்தத்தில்
பற்களைப் பார்ப்பதற்கு பதில்
சொற்களுள் சந்தித்துக்கொண்ட
கவிதை நாட்கள்
அவை..

எங்களுக்கு
இருவருக்குமே பார்வை தெரியாது
காலடி சப்தம் புரியும்,
காட்சி கிடையாது –
மௌனத்தில் ஆயிரம் பாடல் எழும்,
வானம் தெரியாது –
ஆனால் எங்களுக்குள்ளும்
நட்சத்திரம் மின்னும்..

சத்தம் போடுவோம்
வண்ணம் கண்டதில்லை,
கை காட்டி ஆட்டி பேசுவோம்
அதிலும் வண்ணம் கண்டதில்லை,
அருகருகில் அமர்ந்திருப்போம்
வண்ணத்தை தொலைக்காமலே – மீண்டும்
மீண்டும் தேடிக்கொண்டிருப்போம்..

முகம் பார்த்ததில்லை
வாசம் தெரியும்,
இதயம் தொட்டதில்லை
உயிரில் அதிரும்,
விலகியிருந்தால் கூட – எங்களின் பார்வையுள்
இடைவெளியே இருந்ததில்லை,

நாங்கள் ஒருசேர பயணிப்போம்
தனியாகவே நடப்போம்,
எங்கெங்கோ பார்ப்போம்
எங்களை மட்டுமே காண்போம்,
யார் யாரென்றெல்லாம் பேசிக்கொண்டதில்லை
எங்களை நாங்கள் –
நாங்களாக மட்டுமே அறிந்திருந்தோம்..

வானவில்..
பூங்கா வாசம்..
மழையின் ஈரம்..
கண்களின் கூர்மை..
முத்தத்தின் ஆழம்..
யாருமில்லா தனியறை..
எல்லாமே எங்களுக்கு – இரண்டு
கோர்த்த கைகளுக்குள் மட்டுமாய்
அகப்பட்டு போனது..

எங்களுக்கு ரயில் வண்டியும்
பேருந்தும்
மகிழுந்தும்
பயணமெல்லாமும் கூட
வெட்டவெளிக்கு சமம்தான்,
தனியிடம் எங்களுக்கு
எங்களின் மனசாட்சியாக மட்டுமே
இருந்திருக்கிறது..

எங்களுக்கு
கூடு சேரும் ஆசையில்லை,
இதயம் சேர்ந்திருந்ததால்
பிரிவுமில்லை,
இருக்கிறாள் என்ற நாள் வரை
இருக்கிறோம் என்றே
வாழ்ந்திருந்தேன்..

இன்று அவளில்லை
அவளில்லாத இடத்தில் நானுமில்லை
எங்கோ இருட்டான ஓரிடத்தில்
அமர்ந்திருக்கிறேன்,
நடந்துச் செல்கிறேன்
ஒரு சுமையாக என்னை
சுமந்துக் கொண்டிருக்கிறேன்..

படுக்கை
பசி
எதுவுமே
தனிமையைவிட பெரிதாக
வலித்திடவில்லை
எனக்கு..

அவளில்லாத இடத்தில்
என்னாலும்
இருந்திடவேண்டாத வலியில்
மனசு
துடி துடியென
துடிக்கிறது…

அவள்
இல்லை என்ற
இடமெங்கும் தேடி
நான்
என்னையும்
அழித்து வருகிறேன்..

அன்றளர்ந்த
நடையினூடே – வெறும்
பாட்டாய் கரைகிறேன்,
பாடல் நிற்குமிடத்தில் –
கண்ணீராய்
கண்ணீராய்
கலைகிறேன்..

இதோ –
காற்று நுழையாத மூங்கில்
புல்லாங்குழலை தொலைத்ததுபோல்
அவளை தொலைத்துவிட்டு
என்னை மட்டும்
வைத்திருக்கிறேன்,
பார்வையில்லாதவனை விட
அவளில்லாதவனே – எனக்கு
அதிகம் வலிக்கிறது..
——————————————-
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

25, உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்..

333333333

1
ழைப் பெய்யும்
எல்லோரும் ஓடி வீட்டினுள்
அடைவார்கள்..

நான் ஜன்னலோரம்
வெளியே நிற்பேன்
நீ ஜன்னலோரம்
உள்ளே நிற்பாய்

மழைக்கு தெரியும்
உன்னையும் என்னையும்..
——————————————————-

2
டைக்கு
காய்கறி வாங்க வருவாய்

எழுதிவந்ததைப் போல்
மடமடவென்று சொல்வாய்

நான் அருகில்
ஒன்றையோ இரண்டையோ
உனக்காக வாங்கிக் கொண்டு
சும்மா நிற்பேன்

திரும்பிப் போகையில்
நீ முன்னே போவாய்
நான் பின்னே
பேசாமலே வருவேன்

வீடுவரை இப்படித்தான்
என்றாலும்
வீடு வந்ததும் சற்று நிதானமாக
நீ நடப்பாய்

நான்
வீடு வந்துவிட்டதே என்று
வேகமாக வருவேன்

உனக்கும்
எனக்கும்
நிழலளவில்
மனசுரசும்

நீ ஒருமுறை என்னை
திரும்பிப் பார்த்துவிட்டு
உள்ளே போய்விடுவாய்

நானந்தப் பார்வைத் தூக்கிக்கொண்டு
உலகெல்லாம் சுற்றிவருவேன்..
——————————————————

3
கா
தலுக்கு வசியமாகிற மாதிரி
உலகு
வேறெதற்கும் ஆவதில்லை

அதென்னவோ நான்
வெளிய வந்தால்
நீயும் வெளியே வருவாய்

உன்னை நினைப்பேன்
நீயும் நினைத்ததாய்ச் சொல்வாய்

ஏதேனும் வாங்கநினைத்தால்
நீயே வாங்கிவருவாய்

உன்னை பிடிக்குமென்று
சொல்ல நினைத்தால்
உனக்கும் மிக பிடிக்குமென்பாய்

ஏன்; உனக்குக்
காய்ச்சலென்றால் கூட
எனக்கும்
காய்ச்சல் வரக்காண்கிறேன்

எனக்கு இதனால் ஒரு
பெரிய பயமுண்டு –

நாளைக்கு ஒருவேளை எனக்கு
மரணம் வருமென்றால் –

உன்னை நினைக்காமலையே நான்
மரணித்துப் போகவேண்டும்..
——————————————————
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

21, வா வா உயிர்போகும் நேரம்..

வா வா உயிர்போகும் நேரம்..

பிரியப்போகிறோம் என்றெண்ணி
கடைசியாய்
கதறி அழுதாயே நினைவிருக்கா?நீ அழுது கேட்ட
தொலைபேசி கூட அன்று
அவ்வளவழுதிருக்கும்..

நான் அழாமல்
அனைத்தையும் உள்ளே
அழுத்தி வைத்திருக்கிறேன்

ஒருநாள் வெடித்துவிட்டால்
உதறிவிடு நினைவுகளை
மறந்துபோ என்றால் –
மறப்பாயா?

நீ மறக்கமாட்டாய்
நினைப்பாய்
எனக்காக அழுவாய்

அதனால்தான்
உனை நினைத்திருக்கும் தருணம் குறித்தும்
மறந்திடாத வலிகுறித்தும் சொல்ல
எனது கண்ணீரை –
காயாது வைத்திருக்கிறேன்

நானழுது
நீ பார்த்ததில்லை இல்லையா..?

உண்மையில் –
நீ பார்த்திராத பொழுதத்தனையும்
நீயில்லாத  தனிமைதோறும்
நான் அழுதிருந்த பொழுதுதான்..

மனது வலிக்க வலிக்க
அழுவது தாயில்லாத பொழுதில்
சாத்தியம்போல் –
நீயில்லாதப் போதும் சாத்தியமெனக்கு..

விட்டுப் பிரிகிறேன் என்று
நீயழுதாய்
நான் – பிரிவதற்கும், நீ அழுவதற்கும்
சேர்த்து
உடைந்துபோகிறேன்..

உன்னை எப்படி மறப்பது?

மனதால் கைகோர்த்து
நடந்தவர்கள் நாம்..

உதட்டால் விலகி
உள்ளத்தால் சிரித்தவர்கள்

விட்டுவிலகியதால்
நினைவு விட்டா போகும்.. ?

நீ நடந்து எதிரே வந்தாலே
எனக்கு உடம்பெல்லாம்
தீ  பிடிக்கும்
மின்சாரம் மனசெல்லாம் பாயும்

என்னை கடந்து நீ
போகும்போதெல்லாம்
உனது  ஒவ்வொரு அடியையும்
நீ மனதுள்ளே மிதித்துச் சென்ற
தடங்களாகவே என்னுள்
பதிந்துவைத்திருக்கிறேன்..

என்றேனும் எனை
நேரில் சந்தித்தால்
என் கண்களைப்பார்
உள்ளே வலிய மறைந்துக்கொள்ளும்
கண்ணீரின் சூட்டிற்குள்
உனக்கு  வலிக்காமல் உனை வைத்திருப்பேன்..

உனக்குள்ளேயே
உயிர்த்திருப்பேன்..

உன் பெயரைச் சொல்லிச் சொல்லி
மூச்சு உள்ளேயும்
வெளியேயும் வரும்.. போகும்..

வராத நாளில்
ஊரார் அதிசயிக்கலாம்
சட்டென உயிர்
பிரியவில்லையே எனலாம்..

நீ மட்டும் புரிந்துக்கொள் – நான்
உனக்காகத் தான் காத்திருந்தேனென்று!!
———————————————————————————-
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்