20, மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்..

மாடி மேலேறி

1
மா
டி மேலேறி
ஆண்டெனா திருப்ப வருவாய்

நான் கூரை மேலேறி
கோழி தேடுவேன்

கோழியும் கிடைத்ததில்லை
ஆண்டெனாவும் திரும்பியதில்லை

கூரைக்கும் மாடிக்கும் தெரியும்
நாம் யாரை தேட வந்தோமென்று..
——————————————————-

2
மொ
ட்டைமாடியில்
பூ பூத்திருக்கும்
நான் எட்டிப் பார்ப்பேன்
மழை வரும்
மழையில் நீ நனைந்து ஓடி
கொடியில் போட்ட துணிகளை எடுப்பாய்
உன்னம்மா மேலேறி வந்து
நீ என்ன செய்கிறாய் என்பாள்

நான் பூ பார்க்க
வந்தேனென்பேன்

அவளுக்கு தெரியும் அது
எந்தப் பூவென்று

அசடு நீ தான்
தெரிந்திருக்கமாட்டாய்; நான்
உன்னைப் பார்க்க வந்ததை..
——————————————————

3
ளியும் ஒலியும் பார்க்க
ஓடிப்போய் அமர்வோம்..

முதல் பாட்டு
வரும் நீ என்னையேப் பார்ப்பாய்

இரண்டாவது பாடல் வரும்
நான் உன்னையேப் பார்ப்பேன்

விளம்பரம் மாற மாற
எல்லோரும் மாறி மாறி அமர்வார்கள்

நீயும் நானும் அதே இடத்தில்
அமர்ந்திருப்போம்
நமக்குள் ஒரு பாடல்
ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கும்..
——————————————————

4
ல்லோரும் கடற்கரைக்குப்
போகையில் அலைமிதித்து
வருவார்கள்

நான் கரையிலமர்ந்து
உனது பேரெழுதி எழுதி அழிப்பேன்

மீண்டும் மீண்டும்
உன் பேரெழுதுவதில்
அவ்வளவு சந்தோஷம் வரும்..

அலைகள் வந்து வந்து
போவதைப்போல
நீயும் போய் போய் வருவாய்..

எனக்குள்
இருந்துக்கொண்டே இருப்பாய்..
——————————————————

5
திய உணவு
கட்டிப்போனால்
திறக்கையில் உன் முகம் தெரியும்

மேலே வானத்தைப்
பார்த்துவிட்டு திரும்பி
காற்றை தொடுவேன்

காற்றில் உன் வாசம்
மணக்கும்

உணவை
மூடிவைத்து விட்டு
ஓடிவந்து
உன் வகுப்பறை ஓரம் நிற்பேன்

நீ சாப்பிட்ட உணவை
பாதியில் மூடி பையில் வைத்துவிட்டு
கைகளை நீட்டி
காற்றை தொடுவாய்

எனக்கு
பசியெல்லாம் பறந்துபோகும்
மனசெல்லாம் நீயே நீயே நிறைவாய்..
——————————————————

6
ப்போதும் எஸ்எம்எஸ் வரும்
ஏர்டெல் விளம்பரமென்றெண்ணி
விட்டுவிடுவேன்

இப்போது
ஏர்செல் விளம்பரம் செய்தால்கூட
நீயா இருக்குமோ
என்று திறந்துப் பார்க்கிறேன்

மனதிற்கு
யார் என்னவென்றெல்லாம்
தெரிவதேயில்லை

நீ மட்டும்
எங்கும் நீயாகவே தெரிகிறாய்..
—————————————————–
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

14, காற்றில் பூக்கும் இதயங்கள்..

உனக்கும் எனக்கும்..

னக்கும்
எனக்கும்
இரண்டு அலைகளுக்கு இடைப்பட்ட
தூரமே உண்டு
கடலின் ஆழம் தூரம்
ஜாதி
மண்ணாங்கட்டி பற்றியெல்லாம்
நமக்கு கவலையே இல்லை

சாதி என்ன
மண்ணாங்கட்டியா என்பர்
சிலர்;

உடம்பு கீறி
உனக்கும் எனக்கும் வரும் ரத்தம்
வேறு வேறல்ல
என்றுப் புரியாத மனிதர்க்கு
வலிக்கும் நம்முன்
பிரிக்குமந்த சாதி
மண்ணாங்கட்டிக்கும் கீழ் தான்

நமக்கெதற்கு அதலாம்
நமக்கு சாதி தெரியாது
காதல் தான் தெரியும்,
முதலில் சேர்ந்த இரண்டு
ஆதிமனிதரைப்போல் நேசத்தின் உச்சியில்
நெஞ்சேறி அமர்ந்திருக்கும்
நமக்கெல்லாம்
நெற்றிப் பொட்டில் சுட்டாலும்
காதல் தீராது

நேரே போகும்
இருவரில்
ஒருவர் மேல்
மற்றொருவர் கீழென்றுச் சொல்லும்
சாதி பெருசு எனில்
சொல்பவரை
தீ மென்று போடட்டும் – நீ போ

நீ போனால்
நான் வருவேன்
நான் போனால்
நீ வருவாய்..

முன்னும்பின்னுமாய்
இருவரும்
சேர்ந்தேயிருப்போம்..

தோட்டத்து மலர்களைப்போல
மனதால்
பூத்துக் கிடப்போம்..

நமக்கு போகும் தெருவெல்லாம்
நிலா காயும்
சூரியன் குளிரும்

காதல் ஒரு
பெருங் காற்றோடு தான்
இதயத்தில் வீசுகிறதென்று நாம்
பேசி பேசி
சேர்த்துவைப்போம்

மரம் பூ இலைகளைப்
போல
உடலுரசி உரசி
மனதின் ஆழத்தில்
உன்னையும்
என்னையும் புதைப்போம்..

மண் தோண்டி உள்மூடிய
மரத்தின் வேரினைப்போல
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
போகுமிடமோ திசையோ
அறியாது
உயிரூன்றி இருப்பதை
வெளியில் பறக்கும் பட்டாம்பூச்சியோ
சிட்டுக்குருவியோ
அறிந்திருக்காது

உனக்கும் எனக்கும்
மட்டுமே தெரியும்
நீ பிரிந்தாலும்
நான் பிரிந்தாலும்
நாமிருவருமே இறந்துபோவோமென்று!!
————————————————————————–
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

13, மறப்பதில்லை மாறுவதற்கு..

வாழ்க்கையின் அத்தனை..வாழ்க்கையின் அத்தனை
அவசர ஓட்டத்திற்கு நடுவேயும் நான்
உன்னையும் நினைத்துக்கொண்டே ஓடுவதை
யாரறிவார்..?

உன் பிறந்ததினம்

நீ முதலில் பேசிய நாள்

அதிர்ந்துப் பார்த்தப் பார்வை

தெருமுனை

உன் எதிர்வீட்டு சன்னல்

நீ எதிரே நிற்குமந்த
மொட்டைமாடி

கடைசியாய்
விளக்கமர்த்த வருமந்தப்
பின்னிரவு

பிடிக்காவிட்டாலும்
தெருவில் நிற்க வாங்கும் ஏதேதோ

எனக்காக சுமந்த உன்
கனவு

நீ அழுத வலி

காத்திருந்த நாட்கள்

பெற்றிடாத நம் முத்தம்

எல்லாம் எல்லாம் எல்லாம்
என்னோடிருக்கிறது..

நினைவு முழுதும்
நீ இருக்கிறாய்

இன்னும் நூறுவருடம்
கழித்துக்கூட வந்து கேள்
ஒரு சொட்டுக் கண்ணீருக்குள்
பத்திரமாய் வைத்திருப்பேன் உன்னை!
————————————————————————-
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

12, நிழலுக்கு முன் நீ..

சிரித்தது sandaiyittadhuசிரித்தது
சண்டையிட்டது
சைகை செய்தது
மறைந்துப் பார்த்து காற்றுவெளியில்
முத்தமிட்டது

எல்லாவற்றையும்
நினைவில் வைத்திருக்கிறாயா?

எனக்காக நீ முகத்தில்
அப்பிக்கொண்டுவரும் அந்த பவுடர்கூட
எனக்கு மறக்கவில்லை..,

இரும்பு கதவின்
மூடும் சத்தம்,
நீ வந்துநிற்கும்
குழாயடிப் பேச்சு

ஓடிவந்து நீ
எனைப்பார்த்ததும் சட்டென நின்றுவிட –
வானிலும்
மனதுள்ளும் பறந்த அந்த புழுதிவாசம்

படித்துவிட்டு
கவிதை
நல்லாருக்கென்றுச் சொன்ன
வார்த்தையும்’
கண்களில் வேறெதையோ பேசிய
பொழுதையுமென

எதையும் என்னால்
மறக்கமுடியவில்லை..

எல்லாமே
கண்ணின் இமையைப்போல
துடிக்கும் இதயம் போல
விட்டிடாத உயிரைப்போலவே
பத்திரமாக இருக்கிறது என்னிடம்..
————————————————————————————–
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

11, வந்து வந்து போகும் அவள்..

அத்தனை லேசாக உன்னைத்தனை லேசாக உன்னை
கடந்துவிட முடியவில்லை..

ஒரே தெருவில் எதிரெதிரே
சந்தித்துக்கொண்டப் பார்வைகள்

நீ பேசி நான் பேசிடாத
பொழுதுகள்

நீ காத்திருந்து
நான் கடந்துவிட்ட நாட்கள்

உன்னை தெரியாமலே
எனக்குள் வலித்த தருணம்

இப்பொழுதும் –
எனை நீ நினைப்பாய்
உனை நான் –
நினைத்துக்கொண்டே யிருப்பேன்

எல்லாம் உள்ளே
வலித்துக்கொண்டே யிருக்கும்

எப்பொழுதையும் போல
நிலா வரும்
நிலா போகும்
நாட்கள் செலவாகும்
வயதுகள் மாறி –
நீ வேறாக
நான் வேறாக ஆவோம்..

அப்போதும் –
இப்படியே
உனை கடந்துவிட
தவித்துக்கொண்டே இருப்பேன் நான்!!
——————————————————————–
வித்யாசாகர்

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக