Tag Archives: அப்பா

உடைந்த கடவுள் – 23

மூச்சுப் பிடித்து கேட்டு வாங்கிய வரதச்சனை பொருட்கள் வெறுமனே பரணையில் தூசியுற்றுக் கிடந்தது; அண்ணாவின் கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை அந்த தூசிகளுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் தெரிந்தாவிடும்?!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் -22

குழந்தையோடு தாய்வீடு சென்றிருதேன் ஒரு நாள் மட்டும் குழந்தையை விட்டுவிட்டு போடி என்றாள் அம்மா, ஐயோ ஒருநாளா குழந்தையை விட்டுட்டு ஒருநொடி கூட இருக்க முடியாது; உயிரே போய்விடும் என்றார் அவர். அம்மா நமுட்டாக சிரித்தாள், காலத்தின் நீதியும் அம்மாவின் சிரிப்பும் எனக்குப் புரிந்தது; அவருக்கு புரியவில்லை!! —————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

42 யதார்த்தம் கண்ணீராகவேனும் பதியட்டும்!

மனதை – சுட்டு சுட்டு பொசுக்கியதாய் ஒரு கனாக் கண்டேன்; வானம் தொடாத வாழ்க்கை வான் நிறைந்து வழிந்ததாய் ஒரு கனாக் கண்டேன்; யார் கண் பட்டதை நம்பவில்லை சுத்திப் போட்டதை ஏற்கவில்லை தெய்வம் ஒன்றே போதுமென்றதில் நான் – வீழ்ந்து துடித்த கனா கண்டேன், சொல்ல நா – எழவில்லை சொல்லி சொல்லியும் மனதாரவில்லை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (41)

நீ வயிற்றிலிருக்கும் ஐந்தாறு மாதத்தில் உன்னம்மா வயிறு தொட்டு தொட்டுப் பார்ப்பாள், அசையத் துவங்கிவிட்டாய் என்பாள், எங்களின் அத்தனை வருடக் காத்திருப்பும் பறக்க ரக்கையை விரித்துக் கொண்ட கணமது, நானும் எங்கே பார்கிறேனெனத் தொட்டுப் பார்ப்பேன், உன் அசைவுகளை என் வாழ்வின் அர்த்தமாய் அறிந்துக் கொண்ட பொழுதுகளது. இன்று – இதோ எதிரே நிற்கிறாய் கை … Continue reading

Posted in கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 39

நீ முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்து சூரியனை பார்த்து கண் கூசுகிறதென – கண்களை மூடிக் கொண்டு திறக்க இயலாமல் தவிப்பும் சிரிப்புமாய் நிற்க, நானும் அம்மாவும் உனை ‘ஹே…எனக்.. கிண்டலடிக்க, நீ கண்களையும் திறக்க முடியாமல் முடியவில்லையே எனும் இயலாமையையும் மறைக்க முயன்று சிரித்து மழுப்பிய அழகை எந்த புகைப்படத்தில் பதிந்து வைப்பேன்???? பதிய … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்