Tag Archives: உறவுகள்

51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு..

அத்தனை படபடப்பு அன்று இதயம் முழுதும் இழுத்துக் கொண்டு ஓடும் ரயில்வண்டியென பற்றி எரிந்துக்கொண்டு ஓடிய அந்த உணர்வுகளை எங்கே தொலைத்தோம்? அழுது புரண்டு உயிர்முட்டி வீழ்ந்த தருணங்களில் ஒவ்வொரு முகத்தையாய் எடுத்து எடுத்து பார்த்து அழுதோமே – எங்கே அந்த அழையின் விம்மல் அடங்கிப் போச்சோ? உயிர் அறுந்து கிடந்த பிணமெரித்த வாடை உணர்வைப் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

44, தமிழின பேறுபோற்ற; நடைபோடுவோம்..

ஆழிப்பேரலை அழித்ததன் முடிவிலும் அடங்கா பெருநெருப்பென அகிலம் பரப்பி வெளிச்சமாய் அகன்று வளர்ந்தது தமிழினம்; அடிமைத் தனமகலும் போருக்கு உயிரையும் உதிரத்தையும் – ஆண்டாண்டுகாலமாய் சிந்தியும் சற்றும் ஓயாது வளர்வது தமிழினம்; கேட்டவர், பெற்றவர், பிடுங்கிக் கொண்டவரின் நியாயத்திற்கெல்லாம் தலைசாய்த்தும் – தன் நடை தளராமல் உலகத் தெருவெங்கும் கனகம்பீரமாய் வீறுநடைப் போடுவது தமிழினம்; வீரம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

50, அகதிகளாய் இருக்கும் வரை; அனாதைகள் நாங்கள்

உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாண்ட இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை (11) சாமியும் ஜாதியும்; தியானமும் மதமும்!

இதற்கு முன் நடந்தது.. கடவுளும் மதமும் எவ்விதம் சரியோ; மனிதனும் அவன் மனமும் எவ்விதம் சரியோ; வளர்ச்சியும் மாற்றமும் எவ்விதம் சரியோ; வாழ்தலும் வரலாறும் எவ்விதம் சரியோ; எது சரி எது தவறாயினும் எனக்கு என் சோறும் என் தூக்கமும் என் வேலையும் என் வெற்றிகளுமே பெரிதாக தெரிகையில் என் பிறந்ததின் நோக்கம் வெறும் இறப்பை … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றின் ஓசை (10) தோல்வியில் வெற்றியென்றொரு அனுபவ பாடம்..

இதற்கு முன் நடந்தது.. வாழ்வின் சவால்கள் திறமைசாலிகளால் எதிர்கொள்ளப் படுகின்றன, எல்லாம் வென்று தான் விடுவதில்லை. வெல்லாத இடத்திலிருந்து வெற்றியை நோக்கும் மனிதனுக்கு புரிகிறது ‘தான் வீழ்ந்த இடங்களும் தோற்றதற்கான காரணங்களும். தோல்வியை புறந்தள்ளி வெற்றிக் குதிரையேறி உலகம் முழுக்க சவாரி பிடிக்க அந்த தோல்வியின் அனுபவம் பின் பாடமாகிறது. பாடங்கள் என்னவோ, ‘மாலனுக்கு எதிரே … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்