Tag Archives: ஒற்றுமை

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 1)

காற்று வீசிடாத வான் கிழித்து, பசுமை பூத்திருந்த தரை நோக்கி விரைந்தது நான் பயணிக்கும் அந்த ஸ்ரீலங்கன் விமானம். என் தாயின் மடி தொடும் உணர்வில் – விமானம் நெருங்க நெருங்க ஆசை பூரித்து, வாசலின் முன்வந்து, தரையிறங்கியதும் திறக்கவிருக்கும் கதவு நோக்கிச் நின்றுக் கொண்டேன். விமானம் அறிவித்திருந்த நேரப் படி தாமதமின்றி கொழும்பு விமானதளம் … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

43, போனதடி; பொய்யென ஓர் போர்!!

வீசும் மழை போல் வீசி அடங்கும் மழை போல் அடங்கி காணுமிடமெல்லாம் கண்ணீர் தெளித்து உயிர் கொண்டு போனதடி போர்; எம் உயிர்கொண்டுப் போனதடிப்போர்!! கொஞ்சும் மழலை கொன்று நரை எஞ்சும் பலரை தின்று பெண்கள் மானம்குடித்து கொலைவெறி தரித்து தமிழனை அடையாளமின்றி அழிக்க வந்ததடிப் போர்; அங்கே அழித்துவிட்டேப் போனதடிப் போர்!! துயிலந்தனை இடித்து … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

39) மரணங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..

குருதி வடிக்கும் கண்களின் வருத்தம் புரியா உலகமிது; நின்று யோசித்து நிமிர்கையில் – காலம் அதோ எங்கோ போகிறதே….!! சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா? சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம் பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ? சொல்லி அடித்த பரம்பரைதான் புது ரத்தம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

38) இது விடுதலைக்கான தீ……..

1 பேச வாயற்று போன இடத்திலிருந்தே வார்த்தைகள் வீரியமாய் விழுகின்றன; விழுகின்ற வார்த்தையினால் கொதிக்கும் ரத்தத்தில் தான் – மூழ்கிக் கிடக்கிறது; நம் சுதந்திரம்!! —————————————————————– 2 நாம் அணியும் ஒவ்வொரு சட்டைக்குள்ளும் நம்மை காக்கும் – மானமும் இருக்குமெனில் அதற்குள் – விடுதலையும் இருக்கும்!! —————————————————————– 3 வெள்ளைக் கொடியில் விடுதலை எல்லாம் – … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6) ஒரு குடைக்குள் வா உலக தமிழினமே..(GTV காணொளி)

தனியே நிற்கும் ஒருவனை இன்னொருவன் வந்து தள்ளிப் பார்த்தால் தனியே நின்றவன் ஏனென்றேனும் நிச்சயம் கேட்பான். பத்து பேர் வந்து தள்ளினால் முறைக்கவேனும் செய்வான். நூறு பேர் வந்து தள்ளினால் மானஸ்தனுக்கு கோபமேனும் வரும். ஆயிரம் அல்ல லட்சம் பேர் வந்து சீன்டினாலும் ஒருவனையேனும் திருப்பி அடிப்பான் தமிழன். அந்த வீரத்தை மீட்டு கையில் வைத்திருப்போம். … Continue reading

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்