Tag Archives: கதை

4, அமிலத்தில் விரிந்த காதலின் சிறகுகள்.. (சிறுகதை)

“போ.. போ.. போ.. ஓடு ஓடு.. அதோ அந்தப்பக்கம் போறா பார் போ..” “மச்சான் ஆமாண்டா அதோ போறா தோள் பை மாட்டிக்குனு ஒருத்தி போறா பார் அவளா?” “ஆமாண்டா; அவளே தான், வெள்ளைநிற பை நீள சுடி..” “சரி அப்போ நீ அந்தப்பக்கம் வா நான் இப்படி வரேன்” “இல்லைடா அவ நேரா தான் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

காற்றில் ஒலிப்பாய் வாலி..

வாலி என்றதுமே வயோதிகம் மறக்கும் வாலி என்றாலே வாலிபம் வரும் வாலி என்பதை வரலாறு நினைக்கும் வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்! ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர் பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர் காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர் பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்; பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தவத்தைப் பற்றி சொல்கிறேன் வா..

தூக்கம் விரிச்சோடியக் கண்களுள் சுமக்கிறேன் எனது கனவுகளை.. மாத்திரையில்லா முதிர்ச்சி கண்ணாடியணியாத இளமை காதல் சறுக்காத படிப்பு தோல்வியில் அசராத அறிவு காலத்தைக் குறைத்திடாத இயற்கை யென எல்லாம் சேர்ந்ததொரு மண்ணின் மீதான அக்கறையில் விரிகிறதென் கனவுகள்.. ஆயினும் – மின்சாரமில்லா தெருவில் எரியும் லாந்தர் விளக்கின் சிமினிச் சுற்றி சூடுபட்டு விழும் ஈசல்களைப் போலவே … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..

ஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில் முடையும் பொருளில் தோல்வி வென்றுகொள்கிறது, அல்லது வெற்றி அவசியமற்றும் போகிறது; கூடைகளே வாருங்கள் – கோழிகளின் இறப்பையும் இறகுகளின் வெற்றியையும் இயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்! மாட்டுவண்டி உருண்டோடுகையில் அவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி பிள்ளைகள் கீழே விழ முடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று ஓய்வெடுக்கத் துவங்கியது; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தீராத தீவிரவாதம்..

எது தீவிரவாதம்? எச்சில் உமிழும் வேகத்திலும் எட்டி குதிக்கிறது தீவிரவாதம்.. எழுந்து நடைபழகும் வயதில் முட்டை கொடுத்து பின் மீனறுத்து பிறகு கோழி விரட்டிப் பிடித்து துடிதுடிக்க கழுத்தையறுக்கும் கொடூரத்திலிருந்து குழந்தைக்குப் பரிட்சையமாகிறது தீவிரவாதம்.. எதிரியைச் சுடுவது வெற்றி தான் விழுந்தால் கொலையெனும் மனோபாவம் தீவிரவாதத்தின் முதல் போதனையாகப் பதிகிறது மனதுள் பிற கேள்விகளின்றி.. அப்பா … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக