Tag Archives: கவிதைகள்

12 பசிக்குக் கொஞ்சம் மண்ணேனுமிடு…..

1 ஒவ்வொரு பருக்கைச் சோற்றிலும் ஒருவரின் பசி அடைக்கப் பட்டிருப்பதை அறியாமலே குப்பையில் கொட்டப் படுகிறது தினமும் பழைய சாதம்!! ——————————————————————– 2 மணக்க மணக்க உண்டுமுடிக்கும் முன் ஒரு கை சோறு ஒதுக்கி பிறருக்கும் தர இயலுமெனில் ஒரு உயிரேனும் உயிர்  பிழைக்கும்!! ——————————————————————– 3 டீ  குடித்து பண் தின்று வாழ்பவர்களுக்கு சாபம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்….

அடியே என்னவளே மனசெல்லாம் நிறைந்து நின்னவளே, திரும்பிப் பார்த்து பார்த்தே இதயம் கொண்டுப் போனவளே… நீ போன இடத்திலிருந்து ஒரு புயலே மனசில் அடிச்சிதடி நீ சிரிச்ச சிரிப்புலத் தான் உசிரே உன்னில் கெறங்குதடி; பார்த்த பார்வையில் மான் துள்ள ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி மூடாத கடலைப் போல மனசு உன் நினைப்பிலேயே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

முகுந்தை உ.கு. சிவகுமாரின் கவிதைகள்..

திருக்குறள் பெருமை!! அகர(ம்) ஆதி அடங்கிய முதன்மறை அகில உலக அனுபவப் பொதுமறை அறம் பொருள் காமத் திருமறை ஆதாரம் புதைந்த நிதர்சன வழிமுறை! எறும்புகள் ஊர்ந்திட மலையும் தேயும் குறுவெண் பாவில் இதயம் கரையும் குறலின் உன்னதம் கற்றவர் அறிவர்-மற்றவர் குருவின் பயிற்சியில் தெளிவு அடைவர்! வள்ளுவப் பெருந்தகை எழுதுகோல் எடுத்தார் வான் மண்ணை … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

1 ஆணலையும் பெண்ணலையும் அழகிய தீயாகி!!

கடல் – பல காட்சிகளை விழுங்கிக் கொண்டு கரை வரும் போதெல்லாம் ஒரு குறிப்பெடுத்தே உள்புகுகின்றன; கால் நனைத்த கடலின் உப்புவாசத்தில் ஒருதுளியும் – மர்மமாய் தனக்குள் வைத்துள்ள மரணத்தின் எண்ணிக்கையை யாரும் தட்டிக் கேட்டிடாத மமதை கடலுக்கு இருப்பதேயில்லை; தோண்டத் தோண்டக் கிடைக்கும் வரலாறுகளை விழுங்கியதன் தடங்களை மறைத்து அலையலையாய் அடித்துக் கொண்டிருக்கின்றன கடலின் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

45 பழுத்த இலையின் விளிம்பில் ஒரு சொட்டுக் கண்ணீர்!

மௌனம் உடையா பொழுதொன்று நிலவும் முகமெல்லாம் ஒரு சோகம் படரும் நகரும் நிமிடத்தில் மகிழ்ச்சி மின்னலாய் கீறிச்செல்லும் அரிதான அன்பிற்கே நாட்கள் அத்தனையும் ஏங்கும்; உடை கூட ஆசை களையும் உண்ணும் உணவெல்லாம் கடமைக்காகும் உறக்கமது உச்சி வானம் தேடும் உறவுகளின் விசாரிப்பு காதில் எங்கோ என்றோ கேட்கும்; பகலெல்லாம் பொழுது கணக்கும் சட்டைப்பை சில்லறைத் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்