Tag Archives: கவிதைகள்

36 முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்!!

ஈழ விடிவு நோக்கி இடையுறாத காத்திருப்பிற்க்கிடையே விதி ஏற்று – குடும்பம் சுமந்த சுயநல பிறப்பாய் வந்தேறிய தமிழக தெருக்களில் தள்ளாடுகிறது என் கால்கள்; ஒரு – மழை படராத சுவற்றில் வர்ணப் பூச்சுகள் உதிர்ந்த சுவடுகளுக்கிடையே ஏனோ லயிக்கிறது மனசு; என் உடைபடாத வார்த்தைகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் கண்ணீர் குவியலில் யார் யாரை நான் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று (29)

என் வீட்டு எண்ணிக்கையில் எங்களை எல்லாம் மீறி – நன்றியோடு சேர்ந்திட்ட மற்றொரு உறவு; அக்கா அண்ணன் கோபித்த போதும் அம்மா திட்டிய போதும் அப்பா அடித்த தருணங்களின் போதும் வாலாட்டி, முகம் தடவி குழைந்து குழைந்து அன்பூட்டிய செல்ல விலங்கு; பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ எதையேனும் உண்டோ இல்லாமலோ கால் சுற்றி வந்த மிச்சத்தை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

வீட்டின் வாழும் அடையாளம் தலையணை (28)

இரவு நெருப்பின் இன்னொரு காதலன்; காதலி; மனசு பெறாத தூக்கத்தை மெத்தெனக் கொடுக்கும் தலையணை! வருடத்து வாசனைகளை மிச்சம் வைத்திருக்கும்; வந்தவர் போனவரையெல்லாம் நினைவில் முடிந்திருக்கும்; புதிய உறை மாற்றினாலும் – பழசு மறக்காத தலையணை! ஐம்பதிலிருந்து ஆயிரம் வரை விற்கிறது; ஆயிரங்களை கடந்து பழைய கந்தைதுணியில் கனக்கிறது; கனவும் தூக்கமும் வரவு என்பதால் – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

கம்பியூட்டரா? கொக்கா; (27)

நினைத்ததை செய்தும் நேரத்தை விழுங்கும் போதை; விஞ்ஞானம் பேசி அஞ்ஞானத்திலும் ஆழ்த்தும் கண்டுபிடிப்பு; கணினி! வளர்க்கவும் கெடுக்கவும் தெரிந்த ஆசிரியன்; மின் சக்தியில் உயிர் பெரும் ஜடப்பொருள்;கணினி! உலகம் பற்றி – ஒரு சொடுக்கலில் காட்டும் வித்தகன்; மனிதன் விதைத்ததில் – விலையும் அறிவு ஜாலம்;கணினி! சான்றிதழ் இன்றி சர்வமும் கற்பிக்கும் கல்வியாலயம்; சரித்திரம் பேசி, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

மரணத்தை மீட்டெடுப்போம் (26)

இரண்டற கலக்காத நெஞ்சில் வஞ்சமற்று வாழ்கையில், கெடுத்தவனை திருத்த முயல்கையில், அடித்தவனை திருப்பி அடிக்கவும் – அணைக்கவும் முடிகையில், அன்புருதலில், இல்லாதாரிடம் இருப்பதில் – இயன்றவரை பகிர்ந்து கொள்கையில், இருப்பவரை கண்டு ஏங்கி நிற்காமையில், எத்துணிவு பெற்றும் பணிவுருகையில், பணிபவரை மதிக்க கற்கையில், மதியாதாரை புரிந்து கொள்கையில், தவறென்று கண்டால் பொங்கி எழுகையில், தன் தவறாயினும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்