Tag Archives: கவிதைகள்

பசியை ரசித்திரு.. (25)

எங்கோ ஒரு ஜீவன் ஒவ்வொரு பசி வேளையின் போதும் திருடவோ – ஏமாற்றவோ – பொய்சொல்லவோ – அல்லது இறக்கவேணும் தன்னை தயார் படுத்திக் கொண்டுதான் பசி தாங்கி அலைகிறது, புறம் நான்கும் பணம் இருந்தென்ன, உடுத்தும் ஆடைக்குபதில் கடை விற்றென்ன, கோடிகளை கொட்டி அடுக்கி வைத்தென்ன – ஒருவேளை பசியை – ரசித்ததுண்டா பணம் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

ஏனோ; இந்த வாழ்க்கை??? (24)

மூனு வேளை சோறு ஒரு வேளை ஆனது, பத்து மணிநேர தூக்கம் ஐந்து மணிநேரமானது, மாதத்திற்கு ஒரு முறை வெட்டும் – முடி கொட்டி – மொட்டைதலையானது, ஒரு நேர உடல்பயிற்ச்சிக்கும் அவகாசமின்றி – தொப்பை வேறு சட்டி போலானது, இனிப்பு தின்பதோ காரம் விரும்பித் தின்பதோ சிகடை, தேன்மிட்டாய், கைவிரல் அப்பளம், அச்சுமுறுக்கு, தட்டை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

சண்டை + சண்டை = சுயநலம் (23)

கூறு கெட்ட மனுஷன் மேல; கூவம் நாத்தம் தாங்கல; மானங்கெட்ட மனுஷன் மேல கோபம் மட்டும் தீரல! மானம் ரோசம் கோபம் போச்சி சண்டை மட்டும் மிச்சமாச்சி.. சண்டை சண்டை சண்டை எங்கப் பார்த்தாலும் சண்டை… சோறு தின்ன சண்டை துணி எடுக்க சண்டை மாடு வாங்கி மேய்க்க சொன்னா அதிலும் – உன் மாடு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்

வெளியூர் வாசிகளின் வலி (22)

இதயம் கீறி எழுதும் ரத்தம் சிந்தா வலிகளை சுமந்து தான் வளைகுடாவில் நகர்கிறது வாழ்க்கை; பிறந்த மண், வீடு, மழை, காற்று, மலர்களின் வாசமும்.. இடி, காகம், குழந்தைகளின் பேச்சு, நாய் குறைப்பு, மாடு கத்தும் ஓசையும்.. பசும்புல் கால் நனைக்கும் பனியின் ஈரம், காலை நேர தேனீர், சுட சுட ருசிக்கும் சிற்றுண்டி, வேளை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

வெற்றுப் பிணம் நாம்!!! (20)

மனதின் – நீள அகலங்களில் எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்; வெளியில் தெரியாமல் உள்ளழுத்தும் வலிகளுக்கு எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை; எதையோ தேடி யாரையோ நினைத்து எங்கோ மனது கிடந்து அலையும் தருணங்களில் அழுதுவிடாத வருத்தங்கள் சுடத் தான் செய்கின்றன; வெற்றியை தலைமேல் சுமந்து எத்தனை தெருக்களில் நடந்துத் திரிந்தாலும் தோற்கும் வினாடிகள் வெற்றியின் சிகரத்தை வீழ்த்தாமலில்லை; என்ன … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 3 பின்னூட்டங்கள்