Tag Archives: கவிதைகள்

சித்தனும் பித்தனும் இயற்கை (4)

பிரபஞ்சத்தின் நிர்வானத்திற்கு பசுமையில் கட்டிய பட்டாடை; மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை! ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம் உலகை அள்ளிப் பருகிடாத கொடை; சுடும் நெருப்பு – சுட்டெரிக்கும் சூரியன் கடும் பல நட்சத்திரச்ங்களை தாண்டி பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை; ஆலகால விசமும் பூக்கும் அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும் இடையே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

ஆட்காட்டி; நாட்காட்டி (3)

சுவற்றில் ஆணியடித்த மூடர்களின் கடவுள்; நல்லநேரம் கெட்டநேரம் என்றெல்லாம் சொல்லி விளம்பரத்திற்காய் – வீடு வரும் பித்தன்; ராகுகாலம் எமகண்டமென்று ஏமாற்றும் சமூக சீர்கேடர்களின் கைக்கூலி; காசுவாங்கிக் கொண்டு அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் கால துரோகி! நாட்களின் நகர்தலை அளந்து காட்டுவதாலும் – நாளொரு தகவல் கொண்டு இயங்குவதாலும் மட்டுமே – பணம் கொடுத்து வாங்கிவரும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

மேகப் பூக்களின் விளம்பரப் பலகை – வானவில்

ஏழு வண்ணத்தில் எண்ணிக் கோர்த்து ஏழைகள் பார்வை உடுத்தும் – பட்டாடை; வானவில்! வளைந்த புருவத்தில் பூமிக் காதலிக்கு வானம் காட்டும் வர்ண ஜாலம்; வானவில்! கல்வியறிவை கடன் வாங்காது இயற்கை நெய்த கணினி வித்தை; வானவில்! ஏற்றத் தாழ்வுகளின் ஏணி மிதித்து உலகின் பார்வைக்காய் பூட்டிவைத்த வான தேவதையின் வண்ண மாலை; வானவில்! காற்றில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

தொலைபேசி

நிறைய இதயங்கள் இங்கு தான் உறைகின்றன; உலகின் தூரங்களை ஒரு சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது தொலைபேசி! காதல் பேசியும் அரசியல் தகவலறிவித்தும் குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின் ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது தொலைபேசி! கால வேகத்திற்கு கையில் அடங்கி போயி; உலக விஸ்த்தாரிப்பை ஒரு சொடுக்கலில் அறிவித்து; மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும் அலைபேசியென அர்த்தம் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்