Tag Archives: கவிதை

சந்தவசந்தத்தின் படமொழிக் கவியரங்கக் கவிதை..

உயிரில் உருகி உருகி ஒருதுளி விழ விழும் துளி சேர்த்து சேர்த்து வான விரிப்பு கிடத்தி அதில் தமிழ் என்று எழுத தவம் தந்த மொழியே, தமிழே வணக்கம்! புல் முளைத்தால் நெல்லாக்கி நெல் பொருக்கி நெல்பொருக்கி பானைகுவித்து பானைபொங்க பொங்கலிட்டு சர்க்கரையாய் இனிக்க கவிவார்க்கும் நெற்கதிர்நோக்கி இந்த இளம்புல்லின் தலைசாய்ப்பும், மதிப்பு நிறைந்த வணக்கமும்!! … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!

நீயில்லாத அறைகளில் நகர்ந்து நகர்ந்து தேடுகிறேன் நீயழைத்த அப்பா எனும் வார்த்தைகளை.. எழுந்து ஓடிவந்து நீ என் மீது எகுறிவிழுந்து சிரித்த நாட்களிலிருந்து விலகும் தூரத்தில் – விடுபடுகிறேனம்மா நான்.. சுற்றி சுற்றி நீ ஓட உன்னைச் சுற்றி சுற்றி நான் ஓடிவர நீ விளையாடியதாய் சொன்னார்கள்’ ஆனால் நான் விளையாடிய அந்த பொழுதுகளை எண்ணி … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

15, ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு..

1 உள்ளூர இருக்கிறது அந்த வலி தாய்வீடு பற்றி – பெண்களைப்போல ஆண்களுக்கும்; என்னதான் உயிரோடு ஒன்றினாலும் தேனில் கலக்கும் கசப்புபோல் கலந்துதான் போகிறது அந்த விஷம், என் அப்பா என் அம்மா என் வீடென – என்னதான் பார்த்தாலும் தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு முன்னதாகியே விடுகிறது; அதுசரி, அக்கறைதானே என்றுதான் விட்டுவிட்டேன் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

47, என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..

இதயம் இடிந்துவிழுந்த இடத்தில் பிறக்கிறது கவிதை, ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம் வடிக்கக் கேட்கிறதென் கவிதை; காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம் வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை, காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில் கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக்  கேட்கிறதென் கவிதை; இடைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

46, தங்கத் தமிழரின் தங்க முகம்..

தங்கத் தமிழரின் தங்க முகம், அது தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம் தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர் மனிதரைக் கொல்லும் கோர முகம்; நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங்கம் அவன் கிரீடம் கூட – மதுரை ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில் அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்.. நித்யானந்தா என்று சொன்னால் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்