Tag Archives: தொகு

அகல்விளக்கு எரியட்டும்; இனி அழாதே!!

நான் முழுதாகப் படித்திடாத புத்தகம் நீ; அருகருகில் இருந்தும் உரசிக்கொள்ளாத நெருப்புக்குச்சிகள் நாம், உதட்டுக்கு உறவுக்கும் தொடுதல் நிகழ்ந்திடாத இரவையும் பகலையும் வாழாமலேயே விட்டு விலகி வந்ததில் ஊமையாகிப் போயிருக்கிறாய் நீ, நான் வேறேதேதோ பேசி பேசி – நம்மை மட்டும் மறந்திருக்கிறேன்..   உன் சிரிப்பு காற்றில் சலசலத்தபோது எப்படியோ கண்களை மூடிவிட்டிருக்கிறேன் நீ … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

4) அம்மா வரயிருக்கும் கடைசி இரவு..

இந்த இரவைக் குடிக்க ஒரு துளி விசமிருப்பின் கொடுங்கள் குடித்துவிட்டு கீழே சரிகையில் பொழுது விடியும்; விடிந்தால் அம்மா வருவாள், இத்தனை நாள் – அவளைவிட்டுப் பிரிந்திருந்த சோகம் நெஞ்சை அடைக்கும், அம்மாவைப் பார்க்காதிருந்த பாரம் கண்ணீராய் உயிருருக வழியும், கலங்கியக் கண்பார்த்து அம்மா துடித்துப்போவாள்’ ஈரம் நனைந்தப் பார்வையால் எனைத் தொடுவாள், தூக்கி நிறுத்தி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

3) வெறும்பய பெத்தவளே..

புத்தகத்தில் குட்டிப்போடும் மயிலிறகு தந்தவளே.., ஒரு பருக்கை மீறாம உண்ணச் சோறு போட்டவளே.., பத்தோ அஞ்சோ சேமிச்சு பலகாரம் செஞ்சவளே, பழையப் புடவை தொட்டில்கட்டி வானமெட்ட சொன்னவளே.. மழைப்பேஞ்சி நனையாம எனைமறைச்சி நின்னவளே.., எங்கிருக்க சொல்லேண்டி வெறும்பயலப் பெத்தவளே..? நீ அடிச்ச அடி திட்டினத் திட்டு எல்லாமே அன்று வலிச்சதடி, இன்று அடிப்பியான்னு அழுது நிக்கிறேன் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

2) பாவம் பொடிபட மனிதம் புரிபடும்!!

ஓடும் எறும்பு நசுங்கிப்போகும் தின்ற மீனின் உடம்புநோகும் வெட்டும் சதையில் பாவம் வடியும் அது வாழ்வெங்கும் கூட வரும்; பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம் சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம் உறவு புரியா மனதிற்குள்ளே ஆயிரம் பூதம் கனமே சேரும்; திட்ட கூட மனசு சாகும் வார்த்தை அடியில் இதயம் கிழியும் மனித எண்ண ஓட்டையில் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை சொல்கிறார் கேளுங்கள்..

அப்போதெல்லாம் சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாலைநேரத்தில் கதையைச் சொல்லி இசையோடு ஒலிபரப்புவார்கள்; இன்று அங்கே என் கதையும் அதற்கு உயிர் தந்த வானொலியுமென திரு. றைசல் மற்றும் பாலசிங்கம் பிரபாகரன் போன்ற அந்தச் சகோதரர்களை மிக நன்றியோடு பார்க்கிறேன்.. http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319652/t/Thathaavin-Mokkukkannadi-A-short-story-by-Vidhyasagar கதை கேட்க மேலே சொடுக்கிக் கேளுங்கள். கவிதைகளுக்கு கீழே சொடுக்கவும்; http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/319396/t/Vidhyasagar-s-poemsContinue reading

Posted in அறிவிப்பு, சிறுகதை, வானொலி நிகழ்ச்சிகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்