Tag Archives: மரணம்

33) கவிதையில்லாத பொழுது..

ஒரு நெடுமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வேரறுபடும் நிலை; மண் வாரி முகத்திலெறிய நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய் உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்; உயிர் முடிச்சவிழ்ந்து துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில் ஒரு விளக்கு அணைந்த இருட்டு; அனல் காற்றில் வெப்பமேறி வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஒற்றுமையில்லாமையின் குற்ற சாட்சி; செங்கொடி!

1 துண்டு துண்டாய் கசிந்து எரிந்து வெடித்த ஒற்றுமை நெருப்பு உன் உடல் தீயில் வெந்து ஒரு இன வரலாற்றை திருப்பி வாசிக்கிறது! —————————————————————- 2 தற்கொலை கொலை விபத்து எதுவாயினும்’ போன உயிர் வாராதென்பதை உரக்கச் சொல்லவும் உன் உயிர் எரியும் தீக்கொழுந்து மறைமுகமாகவேனும் ஒரு இனத்தின் தேவையானது! —————————————————————- 3 காற்று வானம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

செங்கொடியின் தீநாக்கில் எரிகிறது’ அஹிம்சையின் பெருநெருப்பு!!

உள்ளெரிந்த நெருப்பில் ஒரு துளி போர்த்தி வெந்தவளே, உனை நெருப்பாக்கி சுடப் போயி எம் மனசெல்லாம் எரிச்சியேடி.. மூணு உயிர் காக்க உடம்பெல்லாம் தீ மையிட்டுக் கொண்டவளே, தீ’மையில் உன் விதியெழுதி – எம் பொய்முகத்தை உடச்சியேடி.. விடுதலை விடுதலைன்னு வெப்பம்தெறிக்க கத்துனியா? அதை கேட்காத காதெல்லாம் இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி.. செத்தா சுடுகாடு, … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம்!!

மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே. தவறுகள் எல்லோரிடத்திலும் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

71, யாரையும் நோகாத கனவுகள்..

வலிக்காமல் சலிக்காமல் நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல் நிஜம் பூத்த மலர்களின் – வாசத்தொடும், வரலாறாய் மட்டும் மிகாமலும், முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் – மல்லிகைப் பூக்க, ஒற்றை நிலாத் தெரிய, மரம் செடி கொடிகளின் அசைவில் – சுகந்தக் காற்று வீசும் – தென்றல் பொழுதுகளுக்கிடையே; வஞ்சனையின்றி – உயிர்கள் அனைத்தும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்