Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

2 உடைந்த கடவுள்!!

என்றோ பல ஆண்டுகளாய் பூமியில் புதைந்து கிடக்கிறது தங்கம்; தோண்டி எடுத்தவன் தானே செய்ததாக சொன்னான், செம்மொழி! ———————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1 உடைந்த கடவுள்!!

பசையோடு கையும் தேய போஸ்டர் ஒட்டிய எந்த பாட்டாளியையும் எந்த தலைவனுமே திரும்பிப் பார்ப்பதில்லை; பாட்டளிகளின் சாமியறையில் மட்டும் எப்படியோ மாலையும் பொட்டுமாய் நிறைய பேர் வெட்டியாக!! ——————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

14 ஓ………. உலக தமிழினமே..

நிறுத்துங்கள் !!! மௌனமென்னும் மண் பூசி தான் – ஈழத்தில் வந்தேறியின் சுவடுகள் கூட வெற்றிக்கொடியின் சின்னமாயின. ஈழத்தில் தமிழரின் ரத்தம் ஈரமாக மட்டுமே மீதமானது. ஓ………. உலக தமிழினமே மௌனம் களைந்து புறப்படுவோம் வாருங்கள்; போர் வேண்டாம் – ஓர் குரலாவது கொடுப்போம், அதை; எல்லோரும் கொடுப்போம்!! ——————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

13 ஓ………. உலக தமிழினமே..

யாருக்கேனும் எழுதுகோலில் ரத்தம் விட்டு எழுத எண்ணமா? போன வருடம் ஈழத்தில் இழைக்கப் பட்ட கொடுமைகளை சற்று பாருங்கள் – படிப்பவரின் கண்களில் ரத்தமும் சொட்டலாம்! ——————————————–

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

12 ஓ………. உலக தமிழினமே..

பள்ளிக்கூடத்து புத்தகங்கள் நெருப்பில் விழுந்த இதழ்களாகவே பாதி கருகியும் கருகாமலும் ஈழத்து புதை குழிகளில்; வெறும் கணக்கு சொல்கிறார்கள் சண்டாளர்கள் – ‘நான்கு ‘பாடி’ கிடைத்ததாம்!! —————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்