Tag Archives: வித்யாசாகர்

16) மண் தின்ற மழையே…

மழையே! மழையே! எம் மண்தின்ற மழையே.. உயிர்வெள்ளத்தின் கருசுமந்த மழையே.. என்செய்தோம் யாம்.. வயிரருத்துப் போட்டதுபோல் எம் மண்ணறுந்துப் போனது பலகாலம் மழைபார்த்த பூமியோடு எங்கள் மார்பும் பாலின்றி வெடித்து பிள்ளைகள் பசியால் அழுதது பலகாலம்; மழைக்கு அஞ்சி சேர்க்கும் எறும்புப் போல எதை சேர்த்துவைக்க எம் மழையே ? ஒரு வேளைப் பொழுதிற்கே ஓயாது … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..

1 சமையலறைக் குழாயில் குடிக்க தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; பாதி நிறைவதற்குள் நீ என்னருகே வந்து அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிறாய்; நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்; நிருத்திவிடாதக் குழாயிலிருந்து தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய், இரண்டையுமே என்னால் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குவைத்தில் மாபெரும் மண்ணிசைக் கலைவிழா.. (24.11.2011)

ஓடி ஓடித் திரிகிறோம் சளைக்கவில்லை ஒவ்வாதப் படியேறி உதவி வேண்டினோம் வருந்தவில்லை காசுப் பணம் போனாலும் எங்கள் கால்கள தேய்ந்துப் போனாலும் – எம் தமிழ் கேட்கும்திசையெட்டும் வியர்வை சொட்ட – எங்கள் உழைப்பிருக்கும் உதவ நல்எண்ணம் கொண்டோர் பலரிருக்க துணிவுமிருக்கும் தமிழுக்குப் பெருமைச் சேர்க்கப் பலர் உள்ளவரை – காற்று வீசும்வரை கதிரவன் தோன்றும்வரை … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

15) அ.. ஆ.. சொல்லுமழகில் உயிரெல்லாம் அன்பு நிறையும்!!

மரமெல்லாம் பூப்பூக்கும் பூவோடு இலைக் கணியாகும் கணியோடு’ தின்று நிற்க நிழலாகும் நிழலுக்குப் பின் விறகாகும்; விறகெல்லாம் நெருப்பாகும் நெருப்பெல்லாம் எரிந்து விளக்காகும் விளக்கில் வெளிச்சம் பூக்கும் வெளிச்சத்தில் வாழ்க்கை நமக்கே வசமாகும்; மனசெல்லாம் ஆசை நிறையும் ஆசையில் அன்பு மலரும் அன்பில் நெருக்கம் தீயாகும் – உடல்தீயின் தகிப்பில் வீடெல்லாம் மழலைச் சிரிக்கும்; செடியாகி … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

14 கடவுளைக் கொல்லும் சாமிகள்!!

நாலு ரூபாய் வருவாயில் நானூறுக்கும் மேலேக் கனவுகள், யார் கண்ணைக் குத்தியேனும் தன் வாழ்வைக் கடக்கும் தருணங்கள்; சாவின் மேலே நின்றுக் கூட தன் ஆசை யொழியாச் சாபங்கள், ஆடும் மிருக ஆட்டத்தில் மனித குணத்தை மறந்த மூடர்கள்; போதை ஆக்கி போதை கூட்டி எழுச்சிப் பாதை தொலைக்கும் பருவங்கள், படிப்பில் படைப்பில் கணினியில் வாய்ப்பேச்சில் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்