Monthly Archives: மே 2011

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 15)

இதற்கு முன்.. விமானம் எப்படி வெடித்தது, ஏன் வெடித்தது, வாசலில் நின்று மிரட்டிய மாதங்கி யார்? அவள் ஏன் அப்படி செய்தாள் ஒன்றிற்குமே விடை கண்டுபிடிக்க இயலாமல் தவித்தனர் லண்டன் விமான நிலையத்தினர். சத்தியசீலன் முதலில் இறங்கிக் கொண்டமையால் யார் கண்ணிலும் படாமால் அவசர பயணியைப் போல் அங்கிருந்து வெளியேறி,  காவலாலிகளோ அல்லது மற்ற யாரோ … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 14)

இதற்கு முன்.. அவள் பெயர் ‘நாராயணி பிரேமதாச’ என்றும், இனம் சிங்களம் என்றும் கண்டதும் அதிர்ந்துப் போனேன். அதற்குள் அவள் வெளிப்பட்டாள். நான் அவளின் கைப்பையினை அவசரமாக கீழே வைப்பதையும் அவள் பார்க்கத் தவறவில்லை. பார்த்துவிட்டாள் என்று தெரிந்ததில் சற்று வியர்த்துத் தான் போனது எனக்கும். அதேநேரம் ஒரு சிறிய டியூட்டி ப்ரீ பிரிவின் பெயர் … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 13)

இதற்கு முன்.. சாரையாக ஊர்ந்துக் கொண்டிருக்கும் எறும்புகளின் வரிசைக்கிடையே கைவைத்துக் கலைத்தால் அது எப்படி நகர்ந்து இங்குமங்குமாய் நாலாப்புறமும் சிதறி ஓடுமோ அப்படி ஒரு பத்து பேர் விமானத்தினுள் ஏறி இங்குமங்குமாய் பரவி சுத்தம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒருவன் எங்களுக்கருகில் வந்தான். அவளை நெருங்கி ‘மாதங்கி அக்கா என் பெயர் கிருபன் என்றான். எனக்கு … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!

ஊர்தாளி அறுத்த கதை உறவு மானம் பறித்த கதை என் தமிழர் ரத்தம் குடித்த கதை இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ; ஈழ-மது  மலரும் மலரும் என் பாட்டன் மண்ணில் உறவுவாழும் காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா; ஊருவிட்டு; வந்தவன் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12)

இதற்கு முன்.. “ஏன் நான் உங்களை தொல்லை செய்கிறேனா?” “ச்ச ச்ச.. போயிட்டு வாங்க, நான் அங்கிருக்கிறேன் பேசுவோம்” கழிவறை கதவு மூடிவிட்டு வெளியே வந்தேன். அவள் முகத்தை சோகமாக வைத்தவாறு என் பின்னே வந்து “நான் உங்களை காணோமே என்றுதான் வந்தேன், வாருங்கள் போவோம்” என்று சொல்லிவிட்டு என்னுடனே வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்