Monthly Archives: ஜனவரி 2012

38) பத்தோடு ஒன்னு பதினொன்னு; பரதேசி..

1 இன்று நாளை என வாங்க செருப்பில்லாமலே தேய்ந்த கால்கள் சில்லறையில் வாங்கிய ஊறுகாய் தவிர்த்து குழம்பு காணாத சோறு வளையிடாமலேயே வணக்கமிட்ட கைகள் தைத்த ஆடை உடுத்தாமலேயே சுருங்கிய தோல் பொட்டலம் பிரிக்கையில் மட்டுமேப் படித்த படிப்பு பாதுகை கைகடிகாரம் அலைபேசி வானொலி மிதிவண்டி ருசியான உணவு என – இன்னபிற எல்லாமே கனவாகவே … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | 3 பின்னூட்டங்கள்

33) கவிதையில்லாத பொழுது..

ஒரு நெடுமரத்தின் இலைகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து வேரறுபடும் நிலை; மண் வாரி முகத்திலெறிய நெருப்பு விழுந்து குழி குழியான கதியாய் உணர்வுகள் அறுபட்டு வலிக்குமொரு ரணம்; உயிர் முடிச்சவிழ்ந்து துடித்து துடித்தடங்கும் உடல் சரிவில் ஒரு விளக்கு அணைந்த இருட்டு; அனல் காற்றில் வெப்பமேறி வெடித்துச் சிதறி மண்ணில் புதையுண்ட விதையின் சிறுமுளை துளிர்த்த உயிர்ஜனிக்கும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

32) விடியும் உரக்க மொழி.. (இசை – ஆதி)

மழை கொட்டினால் மழை செய்தியாகிறது. காற்று அதிவேகமாக வீசுகையில் புயல் செய்தியாகிறது. அரசியல்வாதிக்கு ஒரு தீங்கென்றால் அல்லது ஒரு நடிகருக்கு ஒரு துன்பமென்றால், அவ்வளவு ஏன் ஒரு பிரபல ஆசாமிக்கு தொண்டையில் மீன்முள் குத்திக் கொண்டால் கூட அது அன்றைய தினத்தின் தலைப்பு செய்தியாக ஜோடிக்கப்படுகிறது. எல்லாம் செய்தி தான். வருத்தமில்லை, அது அவர்களின் மேல் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சங்கரின் ‘நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனிவன்’

தமிழகத்து நகரெங்கும் தொங்கும் தமிழென்னும் திராட்சை மரத்தின் தேனிற்கிடையே சொட்டும் ஒரு துளி நஞ்சாகக் கலந்த ஆங்கிலம் விடுத்து முழுக்க முழக்க தன்னம்பிக்கையெனும் அமிழ்தம் நிறைந்த களம் ‘இந்த நண்பன் எனும் திரைப்படம். என் மகன் படித்து பெரிய பட்டதாரி ஆவான் என்ற காலம் கடந்து அவன் பெரிய விஞ்ஞானியாக வருவான், மருத்துவனாக ஆவான், குறைந்த … Continue reading

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

31, இது நம் ஒற்றுமையின் இரண்டாம் பாடல், இசை ஆதி!

உறவுகளுக்கு வணக்கம், விரல்பிடித்து அழைத்துவந்த உங்களின் பின்னால் வந்த என் எழுத்தினை  இசையாக்கி அதைப் பாட்டாகவும் அமைத்துள்ளோம் முகில் படைப்பகம் மூலம். ஒற்றுமை நம் வலிமையான ஆயுதம்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் எண்ணமாக இப்பாடல் பதியப் பட்டுள்ளது. எங்கோர் தமிழன் ஒடுக்கப்பட்டாலும் எங்கிருக்கும் தமிழனுக்கும் சுள்ளென உரைக்கவேண்டும், அங்ஙனம் உரைக்கையில் அது வலித்து துடித்து … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்